போதைப்பொருள்; காவல் ஆணையர் எச்சரிக்கை

போதைப்பொருள்; காவல் ஆணையர் எச்சரிக்கை

1 mins read

சென்னை: கள்­ளச்­சா­ரா­யம், கஞ்சா உள்­ளிட்ட போதைப்­பொருள்­கள் விற்­ப­னையை அறவே துடைத்­தொ­ழிப்­ப­தில் காவல்­து­றைக்­குப் பொது­மக்­கள் உ­தவ வேண்­டும் என சென்னை காவல்­துறை ஆணை­யர் சங்­கர் ஜிவால் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

இத்­த­கைய சட்­ட­வி­ரோத செயல்­பா­டு­கள் குறித்து விவர­மறிந்­தோர் கைப்­பேசி மூலம் காவல்­து­றைக்குத் தகவல் அளிக்­க­லாம் என செய்தி­யாளர்­க­ளி­டம் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

மேலும், போதைப்பொருள்­களை கடத்­து­ப­வர்­கள் மீது குண்­டர் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் கடும் நட­வ­டிக்கை எடுக்கப்­படும் என­வும் ஆணை­யர் எச்­சரிக்கை விடுத்­தார்.

"சென்னை பெரு­ந­கர காவல்­து­றை­யி­னர் தீவிர கண்­கா­ணிப்புப் பணியை மேற்­கொண்டு வருகின்றனர்.

"அதன் மூலம் மாநிலம் முழுவதும் கள்­ளச்­சா­ரா­யம், போலி மது­பா­னம், கஞ்சா, மெத்த­னால் உள்­ளிட்ட போதைப்­பொ­ருள்­களை கடத்தி வரு­ப­வர்­கள், விற்­பனை செய்­ப­வர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­ற­னர்.

"வாக­னத் தணிக்­கை­கள், தீவிர சுற்­றுக்­கா­வல் பணி­கள், சிறப்பு அதி­ரடி தணிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்றன.

"இதுபோன்ற குற்­றச்செயல்­களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்­டத்­தின் கீழ் கடும் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும்," என்று சென்னை பெருநகர காவல் ஆணை­யர் சங்­கர் ஜிவால் எச்­ச­ரித்­துள்­ளார்.