திருச்சி: ஏழாம் வகுப்பு மாணவியான ரிபாயா தொடர்ந்து பத்து மணி நேரம் சிலம்பம் சுழற்றி சாதனை (படம்) படைத்துள்ளார்.
திருச்சி மாவட்டம், பொன்மலை பகுதியைச் சேர்ந்த அம்மாணவி நேற்று முன்தினம் பள்ளி வளாகம் ஒன்றில் இந்தச் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
காலை 6.20 மணிக்கு சிலம்பம் சுற்றத் தொடங்கிய அச்சிறுமி, தொடர்்ந்து 10 மணிநேரம், 10 நிமிடங்கள், 10 விநாடிகளுக்குச் சிலம்பத்தைச் சுழற்றினார். சிறுமியின் சாதனையை நேரில் காணத் திரண்டிருந்த அவரது நண்பர்களும் பொதுமக்களும் அவரை வெகுவாகப் பாராட்டினர்.

