இயற்கை வளங்கள் கொள்ளை: பாமக எச்சரிக்கை

இயற்கை வளங்கள் கொள்ளை: பாமக எச்சரிக்கை

2 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் இயற்கை வளங்­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­ப­டு­வதைத் தடுக்க வேண்­டும் என தமி­ழக அரசை பாமக தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இயற்கை வளங்­க­ளைக் காக்க கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் தேவை என அறிக்கை ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

திருச்சி மாவட்­டம் துறை­யூர் ஊராட்சி ஒன்­றி­யத்­துக்கு உட்­பட்ட நர­சிங்­க­பு­ரம் ஊராட்சி பச்­சை­மலை­யில் சட்ட விரோ­த­மாக செம்­மண் கொள்­ளை­ய­டிக்­கப்­ப­டு­வதைத் தடுக்க முயன்ற வரு­வாய் ஆய்­வா­ளர் பிர­பா­க­ரன் மீது நரசிங்­க­பு­ரம் ஊராட்­சித் தலை­வர் மகேஸ்­வ­ரன் தலை­மை­யி­லான கும்­பல் கொலை­வெ­றித் தாக்குதல் நடத்­தி­யுள்­ள­தாக ஊட­கங்­களில் வெளி­யான செய்­தியை அன்­பு­மணி ராமதாஸ் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

மணல் கொள்­ளையைத் தடுக்க முய­லும் அதி­கா­ரி­கள் மீது தொடர்ந்து தாக்­கு­தல் நடத்­தப்­படு­வது கண்­டிக்­கத்­தக்­கது என்று அவர் கூறி­யுள்­ளார்.

தமி­ழ­கத்­தில் மணல் உள்­ளிட்ட இயற்கை வளங்­களை கொள்ளை­யடிப்­போர் எந்த அச்­ச­மும் இல்­லாமல் வலம் வரு­வ­தா­க­வும் இயற்கை வளங்­களை காக்க நினைக்­கும் அதி­கா­ரி­கள் அஞ்சி நடுங்க வேண்­டி­யுள்­ள­தா­க­வும் அன்­பு­மணி கவலை தெரி­வித்­துள்­ளார்.

மணல் கொள்­ளை­யில் ஈடு­பட்டாலோ, அதைத் தடுக்­கும் அதி­கா­ரி­கள் மீது கை வைத்­தாலோ, அரசு எந்­தி­ரம் நம்மை சும்மா விடாது என்ற அச்­சம் மணல் கொள்­ளை­யர்­க­ளுக்கு ஏற்­படும் அள­வுக்கு இயற்கை வளங்­க­ளைக் காக்க கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை தமி­ழக அரசு எடுக்க வேண்­டும் என்­றும் தவறு செய்­ப­வர்­கள் மீது குண்­டர் சட்­டத்­தின் கீழ் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்­றும் அன்­பு­மணி ராமதாஸ் வலி­யு­றுத்தி உள்­ளார்.

"கடந்த காலங்­களில் மணல் கொள்­ளை­யில் ஈடு­பட்­ட­வர்­கள் மீதும் மணல் கொள்­ளையைத் தடுத்த அதி­கா­ரி­க­ளைத் தாக்­கி­ய­வர்­கள் மீதும் தமி­ழக அர­சும் காவல்­து­றை­யும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என்­பது இதன் மூலம் நிரூ­பிக்­கப்­பட்­டி­ருக்­கிறது. இது தமி­ழ­கத்­திற்கு நல்­ல­தல்ல," என்று அன்­பு­மணி தெரி­வித்­துள்­ளார்.

தாக்குதலுக்கு ஆளாகும் அரசு அதிகாரிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் பாமக தலைவர் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரே­ம­லதா எச்­சரிக்கை

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தின் இயற்கை வளங்­களை அழிக்க அனு­ம­திக்­கக்­கூ­டாது என தேமுதிக பொரு­ளா­ளர் பிரே­ம­லதா விஜ­ய­காந்த் வலி­யு­றுத்தி உள்­ளார். தென்­காசி தேமு­திக சார்­பில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தமி­ழக கனிம வளங்­கள் தென்­காசி மாவட்­டம் வழி­யாக கேரளாவுக்கு கடத்­திச் செல்­லப்­படு­வ­தாக அவர் குற்­றம்­சாட்டி உள்­ளார்.