'இந்திய, ஜப்பானிய மாநாடு தமிழகத்தில் நடக்கவேண்டும்'

'இந்திய, ஜப்பானிய மாநாடு தமிழகத்தில் நடக்கவேண்டும்'

1 mins read

சென்னை: தமிழ்­நாட்­டில் உள்ள அதிக அள­வி­லான சிறு, நடுத்­த­ரத் தொழில் நிறு­வ­னங்­களை முன்­னேற்ற இந்­தி­யா­வின் தக­வல் தொழில்­நுட்­பத் திறன்­களும் ஜப்­பா­னின் உற்­பத்தி நிபு­ணத்­து­வ­மும் உத­வும் என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

இந்­திய, ஜப்­பா­னிய கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்­நாட்­டில் நடத்தவேண்­டும் எனத் தாம் விரும்­பு­வ­தாக நேற்று ஜப்­பான் வெளி­நாட்டு வர்த்­தக அமைப்பு ஏற்­பாடு செய்த நிகழ்­வில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.