ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது

1 mins read

ராம­நா­த­புரம்: ஓடும் ரயி­லில் பெண் பய­ணிக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்­த­தாக எழுந்­துள்ள புகா­ரின் பேரில் அர­சுக் கல்­லூரி பேரா­சி­ரி­யர் கைதாகி உள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­துள்­ளது.

ராம­நா­த­பு­ரம் மாவட்­டத்தைச் சேர்ந்த 27 வயது பெண் தனது பெற்­றோ­ரு­டன் ஓசூ­ருக்­குச் செல்ல ரயில் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார்.

அதே ரயி­லில் பய­ணம் செய்த சையத் இப்­ரா­ஹிம் என்ற 57 வயது ஆட­வர், இரவு நேரத்­தில் அந்­தப் பெண்­ணுக்­குப் பாலி­யல் ரீதி­யில் தொல்லை கொடுத்­த­தா­கத் தெரி­கிறது.

இத­னால் அதிர்ச்சி அடைந்த பெண் உதவி கேட்டு கூச்­ச­லி­டவே, மற்ற பய­ணி­களும் அவ­ரது பெற்­றோ­ரும் கடும் அதிர்ச்சி அடைந்­த­னர்.

பின்­னர் அவர்­கள் அனை­வ­ரு­மா­கச் சேர்ந்து சையத் இப்­ரா­ஹிமை பிடித்து ரயில்வே காவல்­து­றை­யி­ன­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.

இளம் பெண் அளித்த புகா­ரின் பேரில் அவர் மீது வழக்­குப்­பதி­வா­னது. விசா­ர­ணை­யில், இவர், சையத் இப்­ரா­ஹிம் சேலம் அர­சுக் கலை கல்­லூ­ரி­யில் உத­விப் பேரா­சி­ரி­ய­ராகப் பணி­பு­ரிந்து வரு­கி­றார் என்­பது தெரி­ய­வந்­தது. அர­சுப் பணி­யா­ளர் என்­ப­தால் அவர் பணி இடை­நீக்­கம் செய்­யப்­ப­டு­வார் எனத் தெரி­கிறது.