சென்னை: பீடி, சிகரெட் ஆகிய புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்குத் தனி உரிமம் பெறும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ள தாக சுகாதாரத் துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனா்.
புதிய விதிகள் நடை முறைக்கு வந்தபின்னர் பெட்டிக் கடை, தேநீா் கடைகளில் இனிமேல் பீடி, சிகரெட் விற்க முடியாது. உரிமம் உள்ள கடைகளில் மட்டுமே அவற்றை விற்பனை செய்யமுடியும். அந்த விதிகளை மீறி நடந்துகொள்ளும் கடைகளுக்கான உரிமத்தை ரத்து செய்யவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
உலக அளவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் பீடி, சிகரெட் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் இங்கு 20 கோடி பேர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக சுகாதார ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலை தொடா்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தில் 13 விழுக்காடு புகையிலை பாதிப்பே காரணமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

