தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டி.கே. சிவகுமார்: மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி

2 mins read
59a39244-c49a-4ddb-b7f8-8b023d51378b
-

தமிழ் நாடு விவசாயிகள் அதிர்ச்சி; நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

பெங்­க­ளூரு: தமிழ்­நாட்­டிற்­கும் கர்­நா­ட­கா­வுக்­கும் இடையே காவிரி தொடர்­பான பனிப்போர் பல ஆண்­டு­க­ளாக நீடித்து வரும் நிலை­யில், காவி­ரி­யின் குறுக்கே மேக­தா­து­வில் அணை கட்­டு­வது உறுதி என கர்­நா­டகா மாநிலத் துணை முதல்­வர் டி.கே.சிவ­கு­மார் திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­யுள்­ளார்.

இந்­த அதிர்ச்சியூட்டும் தக­வ லால் தமிழ்­நாடு விவ­சா­யி­கள் கலக்­கம் அடைந்­துள்­ள­னர்.

கர்நாடக நீர்­வள அமைச்­ச­ரு­மான டி.கே.சிவ­கு­மா­ரின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழக நீர்­வள­ அமைச்­சர் துரை­மு­ரு­கன் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

"பதவி ஏற்­ற­வு­டன் புதிய சிந்த னையுடன் வேறு ஏதாவது பணி­கள் பக்கம் கவனம் செலுத்துவார் என நினைத்­தோம். அண்டை மாநி­லங்­க­ளு­டன் நட்­பு­றவைத் தொட­ரும் எண்­ணம் அவருக்கு இல்லாததுபோல் உள்ளது," என்று கூறியுள்ளார்.

பெங்­க­ளூ­ரு­வில் நீர்­வ­ளத் துறை அதி­கா­ரி­களு­டன் ஆலோ சித்த சிவ­கு­மார், அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

"கர்­நா­டகாவில் நீண்டகால­மாக மேக­தாது அணை, மக­தாயி நதிநீர்த் திட்­டம் ஆகியன நிலு வையில் இருந்து வருகின்றன. அவற்றைக் கால­தா­ம­த­மின்றி செயல்­படுத்த நட­வடிக்கை எடுக்­கும்­படி அதி­கா­ரி­களுக்கு உத்­த­ர­விட்­டுள்ளேன்.

"கர்­நா­டகா மாநி­லத்­தின் நீர்த் தேவையை பூர்த்தி செய்­யும் வித­மாக, விரை­வில் டெல்லி சென்று சம்பந்தப்பட்ட அமைச்­சர்­களைச் சந்­தித்து தேவை­யான நடவடிக்­கை­களை எடுப்பேன். மேக­தா­து­வில் அணை கட்­டு­வது எங்­களது உரிமை. வேறு மாநி­லங்­க­ளுக்குத் துரோ­கம் செய்­யும் எண்­ணம் எங் ­க­ளுக்கில்லை," எனக் கூறினார்.

தமி­ழக-கர்­நா­டக எல்­லை­யில் மேக­தாது என்ற இடத்­தில் அணை கட்டுவதற்குத் திட்­ட­மிட்­டுள்ள கர்­நா­டகா அதற்­கான நிதியை ஒதுக்கி ஏற்­பா­டு­களை முடுக்­கி­விட்­டுள்­ளது. ஆனால், இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரி­வித்­துள்ள தமிழ்­நாடு இது தொடர்­பாக உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்குத் தொடர்ந்­துள்­ளது. அணை கட்ட இடைக்­காலத் தடை விதிக்­கப்­பட்ட சூழ­லில், மத்திய அர­சின் சுற்­று­ச்சூ­ழல் அமைச்சும் இது­வரை அனு­மதி வழங்­க­வில்லை. இந்நிலை­யில், மேக­தாது பிரச்­சினை மீண்­டும் வெடித்­துள்­ளது. துணை முதல்வர் சிவகுமாரின் பேச்சுக்கு அமைச்­சர் துரை­மு­ரு­கன் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. அது எங்களது உரிமை, குறிக்கோள். வேறு மாநிலத்துக்குத் துரோகம் செய்யும் எண்ணம் இல்லை.

கர்நாடக மாநிலத் துணை

முதல்வர் டி.கே.சிவக்குமார்