எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி புகாருக்கு அமைச்சர் கண்டனம்

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி புகாருக்கு அமைச்சர் கண்டனம்

2 mins read

தரு­ம­புரி: தரு­ம­புரி மாவட்­டத்­தில் 7,000 டன் நெல் மூட்­டை­கள் காணா­மல் போன விவகாரம் குறித்து உண்­மை­களை முழு­மை­யாக ஆரா­யா­மல் எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி அவ­ச­ரப்­பட்டு அறிக்கை வெளி­யிட்டு இருப்பதாக உண­வுத்­துறை அமைச்­சர் சக்­க­ர­பாணி கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

தருமபுரியில் வெற்­றி­லைக்­கா­ரன்­பள்­ளம் பகு­தி­யில் தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கத்­தின் நெல் கிடங்கு அமைந்­துள்­ளது. இங்கு இருப்பு வைக்­கப்­பட்­டி­ருந்த 7,000 டன் நெல் மூட்­டை­கள் மாய­மானதாக சென்­னை­யில் உள்ள நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கத்­தின் கண்­கா­ணிப்­புப் பிரி­வுக்கு புகார் போனதை அடுத்து, இந்­தப் பிரி­வின் அதிகாரி­கள் குழு­வி­னர் கடந்த இரு நாள்­க­ளாக ஆய்வு செய்து விசாரணை மேற்­கொண்டு வருகின்­ற­னர்.

இந்­நி­லை­யில், நெல் மூட்­டை­கள் மாயமான செய்தி அதிர்ச்சி அளிப்­ப­தா­க­வும் இதற்குக் கார­ண­மா­ன­வர்­கள் மீது நட­வ­டிக்­கை­கள் எடுத்து நெல் மூட்­டை­களை மீட்­க­வேண்­டும் என­வும் பழ­னி­சாமி வலி­யுறுத்தி உள்ளார்.

இது­தொ­டர்­பாக அவர் தனது டுவிட்டர் பதி­வில், "சர்க்­க­ரையை எறும்பு தின்­றது, சாக்கை கரை­யான் அரித்­தது என்று ஒருகாலத்­தில் கணக்கு காட்­டி­ய­வர்­கள் 7,000 டன் நெல்­லுக்கு என்ன பதில் சொல்­லப் போகிறார்­கள்?" என வினவியுள்ளார்.

இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் சக்கரபாணி, வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்த்து வரும் முதல்­வரின் மீதுள்ள காழ்ப்­பு­ணர்ச்சி கார­ண­மாக பழ­னி­சாமி வசைபாடி உள்ள­தாகச் சாடி­யுள்­ளார்.

இவ்விவ­கா­ரத்­தில் தவறு செய்­த­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க இந்த அரசு தயங்­காது என­வும் அமைச்­சர் குறிப்­பிட்டுள்ளார்.

"7,000 டன் நெல் மூட்­டை­கள் மாய­மான செய்தி வதந்­தி­யா­கும். நெல் மூட்­டை­கள் மாய­மான சம்­ப­வம் குறித்­து விசா­ரணை நடத்­த­வும் மாவட்­டத்­தில் உள்ள 80 அரிசி ஆலை­க­ளி­ல் ஆய்வு செய்­ய­வும் அதி­கா­ரி­க­ளுக்­கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது," என மாவட்ட ஆட்­சி­யர் சாந்தி விளக்­கம் அளித்­துள்­ளார்.