மேகதாது விவகாரம்: தமிழக தலைவர்கள் கண்டனம்

மேகதாது விவகாரம்: தமிழக தலைவர்கள் கண்டனம்

1 mins read

சென்னை: காவி­ரி­யின் குறுக்கே மேக­தாது பகு­தி­யில் அணை கட்­டியே தீரு­வோம் என்­றும் அதற்­காக ஆயி­ரம் கோடி ரூபாய் நிதி ஓதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் கர்­நா­டகா மாநில நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் சிவக்­கு­மார் கூறி­யி­ருப்­பது கடும் கண்­ட­னத்­துக்­கு­ரி­யது என தமிழக நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், காவி­ரிப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்­காக அமைக்­கப்­பட்ட காவிரி நடு­வர் மன்­றம், உச்ச நீதி­மன்­றம் அளித்த தீர்ப்­பு­களில் மேக­தாது பற்றி எது­வும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை எனச் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, முன்­னாள் முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வம் விடுத்­துள்ள அறிக்கை ஒன்­றில், மேக­தாது அணை திட்­டத்தை முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் அமல்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று கர்­நாடக துணை முதல்­வர் உத்­த­ர­விட்டு இருப்­பது தமி­ழக மக்­களிடையே, குறிப்­பாக விவ­சாயி­க­ளி­டையே பேர­திர்ச்­சியை ஏற்­படுத்தி உள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளார்.

மேக­தாது பிரச்­சி­னை­யில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­மல் திமுக அரசு வேடிக்கை பார்ப்­ப­தாக தமி­ழக எதிர்க்­கட்சி தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

கர்­நா­ட­கத்­தில் காவிரி மற்­றும் துணை நதி­க­ளின் குறுக்கே இப்­போ­துள்ள அணை­க­ளின் கொள்­ள­ளவு 104.59 டிஎம்சி என்­றும் இவ்­வ­ளவு கொள்­ள­ளவு உள்ள அணை­கள் இருக்­கும்­போதே கர்­நா­டக அரசு தமி­ழ­கத்­துக்கு தண்­ணீர் தரு­வ­தில்லை என்­றும் பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.