தாம்பூலப் பையில் மதுப்புட்டி

1 mins read
4951bd8e-767b-4bd6-8e6e-8fd033bd70b8
-

புதுவை: புது­வை­யில் நடை­பெற்ற திரு­மண நிகழ்வு ஒன்­றில் கலந்து கொண்­ட­வர்­களுக்கு வழங்­கப்­பட்ட தாம்­பூ­லப் பையில் மது புட்­டி­யும் இடம்­பெற்­றி­ருந்­தது விமர்­ச­னத்­துக்கு ஆளா­னது.

நேற்று முன்­தி­னம் திரு­மண நிகழ்வு விம­ரி­சை­யாக நடந்­தே­றி­யது. பின்­னர் மண­ம­கன் சார்­பில் வழங்­கிய தாம்­பூ­லப் பையில் தேங்­காய், பழம், வெற்­றிலை, பாக்­கு­டன் சிறிய மதுப்­புட்­டி­யும் இடம்­பெற்­றி­ருந்­த­தால் மதுப்­பழக்­கம் உள்­ள­வர்­கள் மகிழ்ச்சி அடைந்­த­னர்.

எனி­னும், இது கலா­சா­ரத்தை சீர­ழிக்­கும் செயல் என மற்­றொரு தரப்­பி­னர் குற்­றம் சாட்­டி உள்­ள­னர்.