தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தலைக்கவசம் அணிந்த பெண்களுக்கு காவல்துறை பரிசு

1 mins read
a383ae6b-0777-43f9-a780-d374205105d5
-

தஞ்சை: இரு­சக்­கர வாக­னத்­தில் தலைக்­க­வ­சம் அணிந்து வந்த பெண்­க­ளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்­தது தஞ்­சா­வூர் காவல்­துறை.

நேற்று முன்­தி­னம் தலைக்­க­வ­சம் அணி­வது தொடர்­பாக தஞ்சை மாவட்­டத்­தின் பல்­வேறு பகு­தி­களில் விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­கள் நடை­பெற்­றன.

குறிப்­பாக, பெண்­கள் தலைக்­க­வ­சம் அணி­ந்து இரு­சக்­கர வாக­னங்­களை ஓட்ட வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டது.

அந்த வகை­யில் தஞ்­சா­வூர் பழைய பேருந்து நிலை­யம் அரு­கில் இரு­சக்­கர வாக­னங்­கள் ஓட்­டி­வந்த பெண்­கள் காவல்­துறை­யி­ன­ரால் தடுத்து நிறுத்­தப்­பட்­ட­னர்.

அச்­சத்­து­டன் வாக­னங்­களை நிறுத்­திய பெண்­க­ளுக்கு, தலைக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­தால் வெள்ளி நாண­யம் ஒன்று பரி­சாக வழங்­கப்­பட்­டது. தலைக்­க­வ­சம் அணி­யா­த­வர்­க­ளுக்கு காவல்­து­றை­யின் அறி­வுரை மட்­டுமே மிஞ்­சி­யது.