தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முடிவுக்கு வந்தது எட்டு நாள் வருமானவரித்துறை சோதனை

2 mins read
67ebdb3d-4cb6-42ea-a0f6-3f6974dca20f
-

கரூர்: கடந்த சில நாள்­க­ளாக கரூர் பகு­தி­யில் அமைச்­சர் செந்தில் பாலா­ஜி­யு­டன் (படம்) தொடர்­பு­டைய இடங்­கள், அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளின் அலு­வ­ல­கங்­களில் நடை­பெற்று வந்த வரு­மான வரிச் சோதனை நிறைவு பெற்­றுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஒரு வாரத்­துக்­கும் மேலாக இந்­தச் சோதனை நடவடிக்கை நீடித்­தது. அச்­சமயம் பல்­வேறு முக்­கிய ஆவணங்­கள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கத் தெரிகிறது.

பல்­வேறு மாவட்­டங்­களில், நாற்­ப­தற்­கும் மேற்­பட்ட இடங்­களில் இந்­தச் சோதனை நடை­பெற்­றது. உண­வ­கங்­கள், கல்­கு­வாரி, அரசு ஒப்­பந்­த­தா­ரர்­க­ளின் வீடுகள் மற்­றும் அலு­வ­ல­கங்­கள் என வரு­மான வரித்­து­றை­யி­னர் சந்­தே­கப்­பட்ட அனைத்து இடங்­களி­லும் சோதனை நடத்தியதாகத் தக­வல் வெளி­யா­னது.

முதல்­வர் ஸ்டா­லின் தமி­ழ­கத்­துக்­கான முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­காக வெளி­நா­டு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொண்ட வேளை­யில் வரு­மான வரித்­துறை மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களால் அர­சி­யல் களத்­தி­லும் பர­ப­ரப்பு நில­வி­யது.

அமைச்­சர் செந்­தில் பாலா­ஜி­யின் நெருங்­கிய நண்­பர்­க­ளான சச்­சி­தா­னந்­தம், செங்­கோட்­டை­யன், பாஸ்­கர் ஆகி­யோ­ரு­டன் தொடர்­பு­டைய இடங்­களில் துப்­பாக்கி ஏந்­திய மத்­திய பாது­காப்­புப் படை வீரர்­களின் துணை யுடன் சோதனை நடத்­தப்­பட்டது.

சோத­னை­யின் முடி­வில், முக்­கிய ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்டு, இரண்டு பெரிய பெட்­டி­களில் அவை கொண்டு செல்­லப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. கணினி உள்­ளிட்ட பொருள்­களும் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

அமைச்­சர் செந்­தில் பாலா­ஜிக்கு கரூர் மாவட்­டத்­தில் செல்­வாக்­கும் தொடர்­பு­களும் அதி­கம் எனக் கரு­தப்­ப­டு­வ­தால், அந்­தப் பகு­தி­யைக் குறி­வைத்து வரு­மான வரித்­துறை இந்த நட­வடிக்­கையை மேற்­கொண்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சில இடங்­க­ளுக்கு அதி­கா­ரி­கள் சீல் வைத்து, தடை செய்­யப்­பட்ட இடம் என்ற அறி­விப்­பை­யும் வெளி­யிட்­டுள்­ள­னர்.

அமைச்­ச­ரின் நண்­பர் ஒரு­வ­ருக்கு டாஸ்­மாக் நிறு­வ­னத்­தின் முக்­கிய ஒப்­பந்­தப்­ப­ணி­கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் இதன் மூலம் அந்த நண்­பர் கோடிக்­க­ணக்­கில் வரு­மா­னம் பெற்று வரு­வ­தா­க­வும் ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

இதை­ய­டுத்து, அமைச்­சர் மூலம் பல­ன­டைந்த ஆத­ர­வா­ளர்­கள் அனை­வ­ரும் வரு­மான வரித்­து­றை­ விசா­ரணை வளை­யத்­துக்­குள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வர் எனத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், கரூர் மாவட்­டத்­தில் நடை­பெற்று வந்த வரு­மான வரித்­து­றை­யின் சோதனை நட­வ­டிக்கை எட்டு நாள்­க­ளுக்­குப் பிறகு முடி­வுக்கு வந்­துள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நட­வ­டிக்­கை­யின்­போது கைப்­பற்­றப்­பட்ட ஆவ­ணங்­கள், பொருள்­கள் குறித்த கூடுதல் தக­வல்­களை அத்­து­றை­யின் அதி­கா­ரி­கள் விரை­வில் வெளி­யி­டு­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிகரிக்கும் நெருக்கடி