அன்புமணி: மின்கட்டண உயர்வால் மீட்க இயலா பொருளியல் நெருக்கடியில் சிக்க நேரிடும்

அன்புமணி: மின்கட்டண உயர்வால் மீட்க இயலா பொருளியல் நெருக்கடியில் சிக்க நேரிடும்

2 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் நுகர்­வோர் விலைக்­கு­றி­யீடு உயர்­வின் அடிப்­ப­டை­யில் மின்கட்­ட­ணத்தை உயர்த்த மின்­சார ஒழுங்­கு­முறை ஆணை­யம் அனு­மதி அளித்­தி­ருப்­ப­தும் அடுத்த மாதம் முதல் மீண்­டும் மின் கட்­ட­ணத்தை உயர்த்த மின்­சார வாரி­யம் முடிவு செய்­தி­ருப்­ப­தாக வெளி­யா­கி­யுள்ள செய்­தி­யும் அதிர்ச்சி அளிப்­ப­தாக பாமக தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

பத்து மாதங்­களில் மீண்­டும் ஒரு மின்­கட்­டண உயர்வு என்­பது மக்­கள் மீது நடத்­தப்­படும் தாக்­கு­தல் என அறிக்கை ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"ஜூலை மாதம் முதல் மின் கட்­ட­ணத்தை உயர்த்­தும் முடிவை மின்­சார வாரி­யம் கைவிட வேண்­டும். அது­மட்­டு­மின்றி, 2026 மற்­றும் 2027ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை மாதத்­தில் மின்­சா­ரக் கட்­ட­ணத்தை உயர்த்த வேண்­டும் என்ற மின்­சார ஒழுங்­கு­முறை ஆணை­யத்­தின் ஆணையை செயல்­ப­டுத்­து­வ­தில் இருந்­தும் விலக்கு பெற அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என­அன்­பு­மணி வலி­யு­றுத்தி உள்­ளார்.

ஆண்­டு­தோ­றும் மின்­கட்­ட­ணத்தை உயர்த்­து­வ­தற்கு அளிக்­கப்­பட்­டுள்ள அனு­ம­தியை இப்­போது செயல்­ப­டுத்த மின்­சார வாரி­யம் துடிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், இதை அனு­ம­திக்க தமி­ழக அரசு முடிவு செய்­தால், அது சரிசெய்ய முடி­யாத பெருந்­த­வ­றாக அமைந்­து­வி­டும் என எச்­ச­ரித்­துள்­ளார்.

"தமிழ்­நாட்­டில் மின்­சா­ரக் கட்­ட­ணம் பத்து ஆண்­டு­க­ளுக்கு முன் உயர்த்­தப்­ப­ட­வில்லை; 10 மாதங்­க­ளுக்கு முன்பு தான் உயர்த்­தப்­பட்­டது.

"மின்­சா­ரக் கட்­ட­ணம் உயர்த்­தப்­பட்­ட­தால் ஏற்­பட்ட பாதிப்­பு­களில் இருந்து பொது­மக்­க­ளால் இன்­னும் மீண்டுவர முடி­ய­வில்லை.

"பல குடும்­பங்­களில், மின்­கட்­டண உயர்­வால் ஏற்­படும் கூடு­தல் செலவை சமா­ளிக்க பால் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய சேவை­களை தியா­கம் செய்ய வேண்­டி­யுள்­ளது," என அன்­பு­மணி ராம­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

மின்­சா­ரக் கட்­டண உயர்­வால் சிறு, குறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கும் பாதிப்­பு­களை சொல்லி மாளாது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், இதன் கார­ண­மாக ஏரா­ள­மான சிறு, குறு நிறு­வ­னங்­கள் மூடப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார்.

மீண்­டும் மின்கட்­ட­ணம் உயர்த்­தப்­பட்­டால் அனை­வ­ரும் மீள முடி­யாத பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்­கிக் கொள்­வார்­கள் என அன்பு­மணி ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.