கோவை: சிறுவனுக்கு நடத்தப்பட்ட காதணி விழாவின்போது கோவை மாநகரின் அடையாளச் சின்னங்களை அவரது குடும்பத்தார் சீர்வரிசையாகக் கொண்டு வந்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
கோவை மாவட்டம் சங்கனூரைச் சேர்ந்த மகேஷ்வரன், தனது மகன் புகழேந்தியின் காதணி விழாவை அண்மையில் சிறப்பாக நடத்தினார்.
அப்போது சிறுவன் புகழேந்தி சாரட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டான். மேலும், கோவையின் அடையாளச் சின்னங்களாகக் கருதப்படும் மருதமலை கோவில், கோனியம்மன் கோவில், மணிக்கூண்டு, ரயில் நிலையம் ஆகியவற்றின் மாதிரிகளை சிறுவனின் குடும்பத்தார் சீர்வரிசையாக கையில் ஏந்தி வந்தனர்.
கோவை மாவட்டத்தின் அடையாளச் சின்னங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்ததாக சிறுவனின் தந்தை மகேஷ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

