ராமதாஸ்: ஆசிரியர் ஊதியம் தினக்கூலியைவிட குறைவு

1 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் அர­சு­ப் பள்­ளி­க­ளுக்கு தற்­கா­லிக ஆசி­ரி­யர்­களை அமர்த்­தல் கூடாது என்­றும் நிலை­யான ஆசி­ரி­யர்­களை உட­ன­டி­யாக பணி­ய­மர்த்த வேண்­டும் என்­றும் பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இது­தொ­டர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், நிலை­யான ஆசி­ரி­யர்­களே இல்­லா­மல் மாண­வர்­க­ளுக்கு எவ்­வாறு தர­மான கல்­வியை வழங்க முடி­யும்? எனக் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

இடைக்­கால ஆசி­ரி­யர்­களை அமர்த்­து­வது கல்வி வளர்ச்­சிக்கு மட்­டு­மன்றி, சமூ­க ­நீ­திக்­கும், மனித உரி­மைக்­கும் எதி­ரா­னது எனச் சாடியுள்ள அவர், நிலை­யான ஆசி­ரி­யர்­களை அமர்த்­தும்­போது, இட ஒதுக்­கீட்டு முறை கடைப்­பி­டிக்­கப்படும் என்­றும் இடைக்­கால ஆசி­ரி­யர்­கள் பணி­ய­மர்த்­த­லில் இட ஒதுக்­கீடு பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை என்­றும் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

மேலும், இத்­த­கைய நட­வ­டிக்­கை­ளில் சமூ­க­ நீதி மறுக்­கப்­படு­கிறது என்­றும் ஆசி­ரி­யர்­களை இடைக்­கா­ல­மாக அமர்த்தி அவர்­க­ளின் உரி­மை­களைப் பறிப்­பதை ஏற்க முடி­யாது என்­றும் ராம­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

"அதே­போல், நிலை­யான ஆசி­ரி­ய­ராக அமர்த்­தப்­படும் ஒரு­வ­ருக்கு கால­முறை ஊதி­யம் வழங்­கப்­படும். ஆனால், இடைக்­கால ஆசி­ரி­யர்­க­ளாக அமர்த்­தப்­ப­டு­வோ­ருக்கு வழங்­கப்­படும் ஊதி­யம் தினக்­கூ­லித் தொழி­லாளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வதை­விட குறை­வா­கும்," என்­றும் திரு.ராம­தாஸ் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.