தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா, இலங்கை இடையே பயணிகள் கப்பல்

2 mins read
8fa6ad3b-ea45-4c39-b233-fed7f76b0015
-

நான்கு மாதங்களில் 50,000 இந்தியப் பயணிகள் இலங்கை செல்வர் என எதிர்பார்ப்பு

சென்னை: இந்­தியா, இலங்கை இடை­யே­யான பய­ணி­கள் கப்­பல் போக்­கு­வ­ரத்து நேற்று தொடங்­கி­யது.

இந்­தச் சேவையை மத்­திய அமைச்­சர் சர்­பா­னந்தா சோனா­வால் சென்னையில் கொடி­ அசைத்து தொடங்கி வைத்­தார். இலங்­கை­யின் ஹம்­பந்­தோட்டா, திரி­கோ­ண­மலை, காங்­கே­சன் துறை ஆகிய மூன்று துறைமுகங்­க­ளை­யும் இணைக்­கும் வகை­யில் இக்கப்பல் இயக்­கப்­ப­டு­கிறது.

மத்­திய அர­சின் 'சாகர்­மாலா' திட்­டத்­தின் கீழ், நீர்­வழி போக்கு­வரத்தை மேம்­ப­டுத்த பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அதன்­படி இந்­தி­யா­வின் பல்­வேறு மாநி­லங்­க­ளுக்கு இடையே பய­ணி­கள் கப்­பல் போக்­கு­வ­ரத்து அனு­மதி வழங்­கப்­பட்டு வரு­கிறது.

இதே திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துக்குக் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்­தக் கப்­பல் பய­ணத்தை தொடங்கி வைத்து உரை­யாற்­றிய மத்­திய அமைச்­சர் சர்­பானந்தா சோனா­வால், இந்தியா­வில் கப்­பல் சுற்­று­லாவை மேம்­ப­டுத்த வேண்­டும் என்­பதை இலக்­காகக் கொண்டு பிர­த­மர் நரேந்­திர மோடி தொலை­நோக்­குத் திட்­டங்­களை வகுத்­துச் செயல்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

இலங்­கைக்கு பய­ணி­கள் கப்­பல் போக்­கு­வ­ரத்தை தொடங்க சென்னை துறை­முக ஆணை­ய­மும் தமி­ழக அர­சின் சுற்­று­லாத் துறை­யும் மேற்­கொண்ட முயற்சி­கள் பாராட்­டுக்­கு­ரி­யவை என்­றார் அமைச்­சர்.

இந்­தியா, இலங்கை இடையே இயக்­கப்­படும் பய­ணி­கள் கப்பலில் மூவாயிரம் பேர் பயணம் செய்ய இயலும். இந்த சொகு­சுக் கப்பலில் பல்­வேறு நவீன வச­தி­கள் உள்­ளன.

நீச்­சல் குளம், மதுக்­கூ­டம், உண­வ­கம், விளை­யாட்டு அரங்­கம், திரை­ய­ரங்­கம் உள்­ளிட்ட பல்­வேறு வச­தி­களை பய­ணி­கள் அனு­ப­விக்­க­லாம்.

அடுத்த நான்கு மாதங்­களில் இந்­தக் கப்­ப­லில் இந்­தி­யா­வில் இருந்து மட்­டும் ஏறக்­கு­றைய ஐம்­ப­தா­யி­ரம் பய­ணி­கள் இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொள்­வர் எனக் கப்­பலை இயக்­கும் தனி­யார் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி ஜூர்­கன் பெய்­லோம் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

இந்­தக் கப்­ப­லின் மூலம் மூன்று முதல் ஐந்து நாள்­களை உள்­ள­டக்­கிய சுற்­று­லாப் பய­ணத் திட்­டத்­தின் கீழ் பய­ணி­கள் தங்­கள் பய­ணத்தை திட்­ட­மிட்­டுக் கொள்­ள­லாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.