தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'ஃபார்முலா 4' பந்தயத்தில் பங்கேற்கும் முதல் தமிழகப் பெண்

1 mins read
3c67a04e-e2a3-4744-a7a9-f2143e364229
-

நீல­கிரி: உல­கப் புகழ்பெற்ற 'ஃபார்முலா 4' கார் பந்­த­யத்­தில் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த பிரி­யங்கா என்ற 12ஆம் வகுப்பு மாணவி பங்­கேற்க உள்­ளார். அவ­ருக்­குப் பாராட்­டு­கள் குவிந்து வரு­கின்­றன.

இப்­போட்­டி­யில் பங்­கேற்­கும் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமை இவ­ருக்­குக் கிடைக்­கும்.

நீல­கிரி மாவட்­டம் குன்­னூ­ரில் வசிக்­கும் சுற்­றுச்­சூ­ழல் ஆர்­வ­ல­ரான விஜய் என்­ப­வ­ரின் மக­ளான பிரி­யங்கா, பெங்­க­ளூ­ரில் உள்ள தனி­யார் பள்­ளி­யில் படித்து வரு­கி­றார்.

கடந்த ஒன்­றரை ஆண்­டு­களாக தீவி­ரப் பயிற்சி மேற்­கொண்டு வரும் பிரி­யங்கா, கடந்த ஏப்­ரல், மே மாதங்­களில் நடை­பெற்ற நான்கு பயிற்­சிப் போட்­டி­களில் சிறப்­பா­கச் செயல்­பட்­டுள்­ளார். அதன் பல­னாக பொதுப்­பி­ரி­வில் அவ­ருக்கு எட்­டா­வது இடம் கிடைத்­துள்­ளது.

மக­ளிர் பிரி­வில் முத­லி­டம் பிடித்து சாதித்­துள்ள அவர், அடுத்து கோவை­யில் நடை­பெற உள்ள போட்­டி­யி­லும் பங்­கேற்க உள்­ளார்.

அது ­மட்­டு­மல்­லா­மல், எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் நடை­பெ­றும் 'ஃபார்­முலா 4' கார் பந்­த­யத்­தில் அகுரா ரேசிங் அணி சார்­பில் பங்கேற்­கி­றார்.