பாலியல் வன்கொடுமைக்கு சிறுமி பலி: போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்

1 mins read

கட­லூர்: பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட சிறுமி உயி­ரி­ழந்­ததை அடுத்து கட­லூர் மாவட்­டம் விருத்­தாச்­ச­லம் பகுதி மக்­கள் போராட்­டத்­தில் குதித்­த­னர். இத­னால் அங்கு பதற்­றம் நில­வி­யது.

ராம­நத்­தம் அருகே உள்ள வாகை­யூ­ரைச் சேர்ந்­த­வர் செந்­தில்­கு­மார். 43 வய­தான இவர் கடந்த மே 22ஆம் அதே பகு­தி­யைச் சேர்ந்த சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கி­னார்.

தன்னை விட்­டு­வி­டு­மாறு அச்­சி­றுமி கெஞ்­சி­ய­போ­தும் செந்­தில்­கு­மார் மன­மி­ரங்­க­வில்லை.

இத­னால் மன­மு­டைந்­து­போன சிறுமி உயிரை மாய்த்­துக்­கொள்ள முயன்­றார். இதைக் கவ­னித்த அப்­ப­குதி பொது­மக்­கள், சிறு­மி­மயை மீட்டு பெரம்­ப­லூர் அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்கு அனு­ம­தித்­த­னர்.

அங்கு சிகிச்சை அளிக்­கப்­பட்ட நிலை­யில், சிறு­மியை சீர­ழித்த செந்­தில்­கு­மாரை கட­லூர் காவல்­து­றை­யி­னர் போக்சோ சட்­டத்­தில் கைது செய்து சிறை­யில் அடைத்­த­னர்.

இந்­நி­லை­யில், சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று முன்­தி­னம் அதி­காலை சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இத­னால் கொந்­த­ளித்­துப்­போன வாகை­யூர் பகுதி மக்­கள் செந்­தில்­கு­மா­ருக்கு அதி­க­பட்ச தண்­டனை வழங்­கக்­கோரி சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

இரு­நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் திரண்­ட­தால் அங்கு பதற்­றம் நில­வி­யது. சிறு­மி­யின் உட­லைச் சுமந்து வந்த ஆம்­பு­லன்ஸ் வாக­னத்தை வழி­ம­றித்து நடந்த போராட்­டத்­தால் ராம­நத்­தம், விருத்­தா­ச­லம் சாலை­யில் போக்­கு­வரத்து பாதிக்­கப்­பட்­டது.

அங்கு விரைந்து சென்ற திட்டக்­குடி வட்­டாட்­சி­யர் மறியலில் ஈடு­பட்­ட­வர்­க­ளி­டம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதை அடுத்து போராட்­டம் தற்­கா­லி­க­மா­கக் கைவி­டப்­பட்­டது. அங்கு காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர்.