தண்டவாளத்தில் மரத்துண்டு; ரயில் தப்பியது

1 mins read

சென்னை: திரு­வள்­ளூர் மாவட்­டம் ஆவ­டியை அடுத்த திரு­நின்­ற­வ­ரூ­ரில் விரைவு ரயில் பாதை­யில் நேற்று முன்­தி­னம் நள்­ளி­ர­வில் ரயில் என்­ஜின் ஒன்று சென்­றது.

அப்­போது தண்­ட­வா­ளத்­தின் குறுக்கே ஏதோ ஒரு பொருள் வைக்­கப்­பட்­டி­ருந்­ததை ரயில் ஓட்­டு­நர் கண்­டார். உட­ன­டி­யாக கீழே இறங்கி பரி­சோ­தித்த அவர், தண்­ட­வா­ளத்­தில் தென்னை மரத்­துண்டு இருப்­ப­தைப் பார்த்து அதிர்ந்­தார். பின்­னர், அந்த தென்னை மரத்­துண்டை ஆவடி ரயில்வே காவல் நிலை­யத்­தில் ஒப்­ப­டைத்­தார். அத­னால் அசம்­பா­வி­தம் தவிர்க்­கப்­பட்­டது.

ரயில்வே டிஎஸ்பி முத்­துக்­குமார் சம்­பவ இடத்­திற்­குச் சென்று ஆய்வு மேற்­கொண்­டார்.

தொடர்ந்து தீவிர விசா­ரணை நடை­பெற்ற நிலை­யில், சந்­தே­கத்­தின் பேரில் சில­ரைப் பிடித்து ரயில்வே காவல்­துறை விசா­ரித்து வரு­கிறது.

ரயி­லைக் கவிழ்க்க சதி நடை­பெற்­றதா என்ற கோணத்­தி­லும் விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

200க்கும் மேற்­பட்ட உயிர்­க­ளைப் பலி­வாங்­கிய ஒடிசா ரயில் விபத்­தின் அதிர்ச்சி வில­கு­வ­தற்­குள் சென்­னை­யில் இப்­படி ஒரு சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது.