ராமநாதபுரத்தைச் சேர்ந்த அதிகாரிக்கு யுனெஸ்கோ விருது அறிவிப்பு; முதல்வர் வாழ்த்து

2 mins read
c98eb980-1f61-4e4a-97d9-a5bbf6c9448f
-

சென்னை: மன்­னார் வளை­குடா உயிர்க்­கோள காப்­பக மேலாண்­மைக்­காக ராம­நா­த­பு­ரத்­தைச் சேர்ந்த அதி­கா­ரிக்கு யுனெஸ்கோ விருது அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

'மைக்­கேல் பட்­டீஸ்' என்ற பெய­ரில் இவ்­வி­ருது வழங்­கப்­ப­டு­கிறது.

உயி­ரி­னக் காப்­பா­ள­ரு­மான ஜக­தீஷ் பகான் சுதா­கர் (படம்)தமக்கு விருது அறி­விக்­கப்­பட்­டுள்­ளது குறித்து மகிழ்ச்சி தெரி­வித்­துள்­ளார்.

"இந்­தி­யா­வி­லேயே முதன் முறை­யாக இவ்­வி­ருது எனக்கு கிடைத்­துள்­ளது. இதை தமி­ழ­கத்­துக்கு கிடைத்­துள்ள பெரு­மை­யாகக் கரு­து­கி­றேன்.

"வனப் பாது­காப்­புக் குழு­வினர், சுய உத­விக் குழு­வி­னர் மூலம் மரக்­கன்­று­கள் நடு­தல், பனை­ம­ரம் நடு­தல் உள்­ளிட்ட பல பணி­களைச் செய்­துள்­ளோம்.

"மேலும், கட­லோ­ரப் பகு­தி­யில் ஏரா­ள­மான மாங்­கு­ரோவ் மரக்­கன்று­கள் நட்­டுள்­ளோம். கடல் ஆமை­க­ளைப் பாது­காக்க அதன் முட்­டை­க­ளைச் சேக­ரித்து பொறிப்­ப­கத்­தில் வைத்து பொறித்­த­தும் குஞ்­சு­களை கட­லில் விட்­டுள்­ளோம்," என்று ஜக­தீஷ் பகான் சுதாகர் கூறி­னார்.

கடல் பசுக்­க­ளைப் பாது­காக்க உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்ட அவர், கடற்­ப­கு­தி­களில் நெகி­ழிப் பொருள்­கள் பயன்­பாட்டைத் தவிர்க்­கும் வகை­யில் தனுஷ்­கோடி, ஏர்­வாடி பகு­தி­களில் சோதனைச்­சா­வடி அமைத்து மஞ்சள் பை வழங்கி வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

இதன் மூலம் மாண­வர்­கள், பொது­மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தி உள்­ள­தா­க­வும் தமக்­கு கிடைத்த விருதை வனத்­து­றைப் பணி­யா­ளர்­க­ளுக்­குச் சமர்ப்­பிப்­ப­தா­க­வும் ஜக­தீஷ் பகான் கூறி­னார்.

இவ்­வி­ரு­து­டன் இவ­ருக்கு ரூ.9.91 லட்­சம் (12 ஆயி­ரம் அமெரிக்க டாலர்) வழங்­கப்­பட உள்­ளது. பிரான்ஸ் தலை­ந­கர் பாரீஸில் ஜூன் 14ஆம் தேதி விருது விழா நடை­பெ­றும்.

இதற்­கி­டையே ஜக­தீஷ் பகான் சுதா­க­ருக்கு முதல்­வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், தமி­ழக வனத் துறைக்­கும் தமி­ழக அர­சுக்­கும் ஜக­தீஷ் பெருமை சேர்த்­துள்ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஜகதீஷ் பகானுக்கு சமூக ஊடகங்கள் மூலம் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.