தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட ஸ்டாலின் அழைப்பு

2 mins read
d9f93772-2c08-4308-9c5b-65e9b73b46f4
-

'நாடாளுமன்றத் தேர்தல் களம் காத்திருக்கிறது; ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்'

சென்னை: திரா­வி­டம் என்ற சொல்லைப் பார்த்து சிலர் அஞ்சு­வதாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் (படம்) தெரி­வித்­துள்­ளார்.

ஒரு­சி­லர் திரா­வி­டக் கொள்­கை­கள் குறித்து கண்ணை மூடிக்­கொண்டு விதண்­டா­வா­தம் செய்­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், எல்­லோ­ருக்­கும் எல்­லாம் உண்டு என்­கிறது திரா­விட இயக்­கம் என விளக்­கம் அளித்­துள்ளார்.

மறைந்த முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நி­தி­யின் நூற்­றாண்டு தொடக்க விழா பொதுக்­கூட்­டம் சென்­னை­யில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. இதில் தமி­ழக முதல்­வ­ரும் திமுக தலை­வ­ரு­மான மு.க.ஸ்டா­லின் எழு­திய 'அப்பா என்று அழைக்­கட்­டுமா தலை­வரே' என்ற புத்­த­கம் வெளி­யிடப்­பட்­டது.

அதை­ய­டுத்து பேசிய முதல்­வர், இந்­தி­யா­வின் ஜன­நா­ய­கம் காப்­பாற்­றப்­பட அனைத்து ஜன­நா­யக சக்­தி­களும் ஒன்­றி­ணைய வேண்­டும் என அழைப்பு விடுத்­தார்.

"திரா­விட மாட­லின் வளர்ச்­சி­தான் தமி­ழ­கத்தை வள­ரச்­ செய்­யும். இந்த தன்­னம்­பிக்­கையை என்­னுள் வளர்த்­த­வர் கரு­ணா­நிதி. நான் அவரது கொள்கை வாரிசு.

"கடந்த 50 ஆண்­டு­களில் தமி­ழ­கம் அடைந்த நன்­மையைச் சொல்­லத்­தான் இந்த நூற்­றாண்டு விழா நடை­பெ­று­கிறது," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

ஆகஸ்ட் 7ஆம் தேதி சென்னை மெரினா கடற்­க­ரை­யில் கலை­ஞர் நினை­வ­கம் திறக்­கப்­பட உள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், அடுத்து நாடா­ளு­மன்­றத் தேர்­தல் களம் காத்­தி­ருக்­கிறது என்­றார்.

"யார் ஆட்சி அமைந்து விடக்­கூ­டாது என்­பதை தீர்­மானிக்­கும் தேர்­த­லாக எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் அமைய வேண்­டும். 2024 நாடா­ளு­மன்றத் தேர்­த­லில் வேறு­பாடு மறந்து இந்­தி­யாவைக் காப்­பாற்ற ஒன்று சேர்ந்­தாக வேண்­டும்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

தமி­ழ­கத்­தில் ஜன­நா­யக ஆட்சி அமைய கூட்­டணி அமைத்­தது போல், தேசிய அள­வில் அமைய வேண்­டும் என்று வலி­யு­றுத்­திய அவர், இதைத்­தான் அகில இந்­திய தலை­வர்­களி­டம் தாம் தொடர்ந்து கூறி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார். மத­வாத சக்­தியை வீழ்த்த தேசிய அள­வில் அனைத்துக் கட்­சி­களும் ஒன்று சேர வேண்­டும் என்­றும் தேவை­யற்ற முரண்­க­ளுக்கு இடம் தரக்­கூ­டாது என்­றும் முதல்­வர் கூறி­னார்.

"பொறுத்­தது போதும் பொங்கி எழு­வோம் என்ற உணர்ச்­சி­யு­டன் புறப்­பட்­டுள்­ளோம். மக்­கள் நம்­மு­டன் இருக்­கின்­ற­னர். நம்­மீது நம்­பிக்கை வைத்­துள்­ள­னர். நம் உள்­ளத்தை ஒற்­று­மை­யால் கட்­ட­மைப்­போம்.

"நாடா­ளு­மன்றத் தேர்­தல் நமக்­காக அல்லாமல் நாட்­டுக்­காக நடை­பெறுகிறது. இது ஜன­நா­ய­கத்தைக் காப்­பாற்ற நடக்­கும் தேர்­தல். இதில் மகத்­தான வெற்றி பெற சப­த­மேற்­போம்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.