மதுபோதையில் ரகளை: மணப்பெண்ணை தூக்கிக் கொண்டு ஓடிய மணமகன்

1 mins read
36142569-ca7a-468f-8ad6-178fa0947996
-

குமரி: திரு­மண விருந்து நிகழ்­வின்­போது மண­மக்­கள் வீட்­டா­ர் இடையே ஏற்­பட்ட திடீர் அடி­தடி கார­ண­மாக மணமகளைத் தூக்கிக்­கொண்டு ஓட்­டம் பிடித்­தார் மண­மகன்.

இச்­சம்­ப­வம் கன்­னி­யா­கு­மரி மாவட்­டம், நாகர்­கோ­வி­லில் உள்ள திரு­மண மண்­ட­பத்­தில் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­தது.

விருந்­தின்­போது மண­ம­க­ளின் உற­வி­னர்­கள் சிலர் மது அருந்தி, போதை­யில் குத்­தாட்­டம் போட்­டுள்­ள­னர். அப்­போது மணமகனின் உற­வுக்­காரப் பெண்­மீது மோதி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து இரு­த­ரப்­புக்­கும் இடையே வாக்­கு­வா­தம் மூண்டு பின்­னர் அது அடி­த­டியைத் தூண்டி­விட்­டது. இரு தரப்­பி­ன­ரும் திருமண மண்­ட­பத்தின் கண்­ணாடி சன்­னல்­கள், இருக்­கை­கள், மேசை­களை அடித்து நொறுக்­கி­னர். தக­வல் அறிந்து விரைந்து வந்த காவல்­து­றை­யி­னர் இரு­தரப்பை­யும் சமா­தா­னப்­ப­டுத்­தி­னர்.

இதற்­கி­டையே, சுற்றி நடக்­கும் ரக­ளை­யைக் கண்டு பயந்­து­போன மணப்­பெண் மயங்­கி­விழ, மண­மகன் பத­றிப்­போ­னார்.

மயங்­கிய நிலை­யில் இருந்த வருங்­கால மனை­வியைத் தூக்கி, அவர் தன் தோளில் சுமந்து, வேக­மாக மண்­ட­பத்தை விட்டு வெளி­யே­றி­னார். மண­ம­கள் பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

இந்த மோத­லின்­போது ஆறு பெண்­கள் உட்­பட பத்து பேர் காய­ம­டைந்­த­னர்.