தடை செய்யப்பட்ட அமைப்புக்கு நிதி; ஆடவரிடம் விசாரணை

1 mins read

காரைக்­குடி: இந்­தி­யா­வில் தடை­செய்­யப்­பட்ட அமைப்­புக்கு ஆத­ர­வா­கச் செயல்­பட்­டது தொடர்­பாக காரைக்­கு­டி­யைச் சேர்ந்த 43 வய­தான சாகுல் ஹமீது என்­ப­வ­ரி­டம் மத்­திய அமலாக்­கத்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது.

இவர் இரு­பது ஆண்­டு­களுக்கு மேலாக சிங்­கப்­பூ­ரில் வேலை பார்த்­த­வர்.

இந்­நி­லை­யில், கடந்த ஆறு மாதங்­க­ளுக்கு முன்பு சாகுல் ஹமீது இந்­திய அர­சால் தடை செய்­யப்­பட்ட அமைப்­புக்கு நிதியுதவி அளித்­த­தாக புகார் எழுந்­தது.

இது­கு­றித்து சிங்­கப்­பூர் காவல்­துறை விசா­ரணை மேற்­கொண்­ட­தா­க­வும் அதன் பின்­னர் அங்கு வேலை பார்ப்­ப­தற்­கான பணி அனு­ம­தியை ரத்து செய்து, சாகுல் ஹமீதை இந்­தி­யா­வுக்கு அனுப்பி வைத்­த­தா­க­வும் ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

அவர் விமா­னத்­தில் சென்னை வந்­தி­றங்­கி­ய­போது, விமான நிலை­யத்­தில் வைத்தே முதற்­கட்ட விசா­ரணை நடத்­தப்­பட்­டது. அதன் பின்­னர் சொந்த ஊருக்கு திரும்ப அனு­ம­திக்­கப்­பட்­டார்.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தினம் வைத்­தி­ய­லிங்­க­பு­ரம் பகுதி­யில் வசித்து வரும் சாகுல் ஹமீது வீடு உள்­ளிட்ட மூன்று இட­ங்­களில் அம­லாக்­கத்­துறை, வங்கி அதி­கா­ரி­களை உள்­ளடக்­கிய பத்து பேர் கொண்ட குழு தீவிர விசா­ரணை மேற்­கொண்­டதாக ஊடகத் தகவல்கள் தெரி விக்கின்றன.