திண்டுக்கல்: மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், பட்டப் பகலில் இளையர் ஒருவர் ஓடஓட விரட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக திண்டுக்கல் நகரில் பதற்றம் நிலவியது.
இரும்புப் பட்டறையில் வேலை பார்த்து வந்த அழகு பாண்டி என்பவர் நேற்று முன்தினம் பழனி சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நின்றபடி கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இரு ஆடவர்கள் அவருடன் பேசத் தொடங்கினர். சில நிமிடங்களில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. திடீரென அழகு பாண்டி அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த இரு ஆடவர்களும் அவரை அரிவாளுடன் விரட்டிச் சென்றனர்.
பின்னர் தங்களிடம் பிடிபட்ட அவரை மீண்டும் பெட்ரோல் நிலையம் அருகே இழுத்துவந்து சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.
பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

