தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெங்காய ஆசை காட்டி ரூ.2.14 கோடி மோசடி: வியாபாரி கைது

1 mins read

திண்­டுக்­கல்: நாசிக் வெங்­காய வியா­பா­ரம் செய்­வ­தாக யூடி­யூப்­பில் விளம்­ப­ரம் பதி­விட்டு ரூ.2.14 கோடி மோசடி செய்த காய்­கறி வியா­பாரி கைதா­னார்.

திண்­டுக்­கல் மாவட்­டம், வத்­த­லக்­குண்­டுவைச் சேர்ந்­த­வர் சூர்யா, 35, என்ற அந்த விவ­சாயி, கடந்த 2021ஆம் ஆண்­டில் யூடி­யூ­ப்பில் புதி­தாகக் கணக்­குத் தொடங்­கி­னார்.

மும்பை நாசிக் பகு­தி­யில் இருந்து வெங்­கா­யம் வாங்கி அதை நல்ல விலை வரும்­போது விற்­று­வ­ரு­வ­தா­க­வும் இதில் முத­லீடு செய்­தால் பணம் 30% அதி­க­மாக திருப்­பித் தரப்­படும் என்­றும் அவர் விளம்­ப­ரம் செய்­தார்.

அதை நம்பி சென்னை, திருச்சி, மதுரை, விரு­து­ந­கர், சிவ­கங்கை உள்­ளிட்ட மாவட்­டங்­களைச் சேர்ந்த 22 பேர் ரூ.2.14 கோடி பணத்தை சூர்­யா­வின் வங்­கிக் கணக்­கில் செலுத்­தி­னர். சூர்யா தலை­ம­றை­வா­கி­விட்­டார்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் காவல்­து­றை­யில் புகார் தெரி­வித்­த­னர்.

அதி­கா­ரி­கள் வழக்­குப்­ப­திவு செய்து, தென்­கா­சி­யில் பதுங்கி இருந்த சூர்­யாவை கைது செய்­த­னர். சூர்யா மீது தொடர்ந்து புகார்­கள் வந்து கொண்­டி­ருப்­ப­தா­க­வும் இத­னால் பண­மோ­சடி மதிப்பு மேலும் அதி­க­ரிக்­க­லாம் என­வும் குற்­றப்­பி­ரிவு அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.