விமான நிலைய புதிய முனையம்; நீடிக்கும் சோதனை ஓட்டம்

விமான நிலைய புதிய முனையம்; நீடிக்கும் சோதனை ஓட்டம்

2 mins read
33dd20d1-5867-422d-ac21-307f9a84eec2
-

சென்னை: மீனம்­பாக்­கத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள ஒருங்­கி­ணைந்த புதிய முனை­யம் ஜூலை மாதம்­தான் முழு­மை­யான செயல்­பாட்­டுக்கு வரும் என விமான நிலைய நிர்­வா­கம் தெரி­வித்­தது.

அங்கு கடந்த சில வாரங்­க­ளாக நீடித்து வரும் சோதனை ஓட்­டங்­கள் இன்­னும் நிறை­வ­டை­ய­வில்லை என்­றும் இம்­மாத இறு­தி­வரை சோதனை ஓட்­டங்­கள் நீடிக்க இருப்­ப­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­தாக ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மீனம்­பாக்­கத்­தில் ஒருங்­கி­ணைந்த புதிய விமான முனை­ய­மா­னது 136,295 சதுர மீட்­டர் பரப்பளவில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. சென்னை விமான நிலை­யத்­திற்கு, ஆண்­டு­தோ­றும் சுமார் 23 மில்­லி­யன் பய­ணி­கள் வந்து செல்­கின்­ற­னர். இதைக் கவ­னத்­தில் கொண்டு புதிய முனை­யம் 30 மில்­லி­யன் பய­ணி­க­ளைக் கையா­ளும் வகை­யில் சிறப்பு வச­தி­க­ளு­டன் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து புதிய முனை­யத்­தில் கடந்த ஏப்­ரல் மாதம் 25ஆம் தேதி முதல் குறிப்­பிட்ட சில விமா­னங்­கள் மட்­டுமே சோதனை அடிப்­ப­டை­யில் இயக்­கப்­ப­டு­கின்­றன. தொடக்­கத்­தில் ஏர் பஸ் 320, 321, போயிங் 737, 738 ரக விமா­னங்­கள் வெற்­றி­க­ர­மாக இயக்­கப்­பட்­டதை அடுத்து நடுத்­தர விமா­னங்­கள் இயக்­கப்­பட்­டன. இவை குவைத், இலங்கை, எத்­தி­யோப்­பியா உள்­ளிட்ட பகு­தி­க­ளுக்கு இயக்­கப்­பட்­ட­தாக தெரி­கிறது. பின்­னர் இரவு நேர சோதனை ஓட்­டங்­களும் நடை­பெற்­றன.

எனி­னும் சோதனை ஓட்­டங்­கள் முடி­வுக்கு வர­வில்லை என அதி­கா­ரி­கள் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

கடந்த சில நாள்­க­ளாக நடை­பெற்ற சோதனை ஓட்­டங்­க­ளின்­போது சில பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­ட­தா­க­வும் அவற்றை நிவர்த்தி செய்ய புதுக் கரு­வி­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து இன்று முதல் புதிய முனை­யத்­தில் இருந்­து 180 முதல் 194 இருக்­கை­கள் வரை உள்ள நடுத்­தர விமா­னங்­கள் இயக்­கப்­பட உள்­ளன.

சிங்­கப்­பூர், மலே­சியா, இலங்கை, துபாய், அபு­தாபி, சார்ஜா, குவைத், உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு இந்த விமா­னங்­கள் இயக்­கப்­படும்.

இம்­மாத இறு­தி­வரை இந்­தச் சோதனை ஓட்­டம் நீடிக்­கும் என்­றும் எந்­த­வி­த­மான புதுப் பிரச்­சி­னை­களும் எழாவிட்டால் புதிய முனை­யம் ஜூலை மாதம் முழு­மை­யான செயல்­பாட்­டுக்கு வரும் என்­றும் விமான நிலைய வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

ஜூலை மாதத்தில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு