தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

600 மரங்களை வெட்டிச்சாய்க்க பாமக எதிர்ப்பு

1 mins read

சென்னை: ரயில் நிலைய பணி­க­ளுக்­காக 600 மரங்­களை வெட்ட ரயில்வே நிர்­வா­கம் திட்­ட­மிட்­டுள்­ளதை ஏற்க இய­லாது என பாமக தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் உள்ள எழும்­பூர் தொடர்­வண்டி நிலை­யத்­திற்­காக கட்­டப்­படும் புதிய கட்­ட­டங்­க­ளின் வடி­வ­மைப்பை சற்று மாற்­றி­ய­மைப்­ப­தன் மூலம் ஏராளமான மரங்­கள் வெட்­டப்­ப­டு­வதை தவிர்க்­க­லாம் என அவர் ஆலோ­சனை வழங்கி உள்­ளார்.

நவீ­ன­ம­ய­மாக்­கம் என்ற பெய­ரில் விலை­ம­திப்­பற்ற மரங்­கள் வெட்டி வீழ்த்­தப்­பட உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், ஏற்­கெ­னவே இரு­நூறு மரங்­கள் வெட்­டப்­பட்­டு­விட்­டன என்ற தகவல் அதிர்ச்சி அளிப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார்.

"அந்த மரங்­கள் அனைத்­தும் 50 முதல் 80 ஆண்­டு­க­ளாக உள்­ளன. பல மரங்­கள் நூறு ஆண்­டு­க­ளைக் கடந்­தவை. பாது­காக்­கப்­பட வேண்­டிய மரங்­களை வெட்டி வீழ்த்­து­வது எந்த வகை­யி­லும் நியா­ய­மல்ல.

"சென்னை எழும்­பூர் தொடர்­வண்டி நிலை­யம் ரூ. 734.91 கோடி­யில் நவீ­ன­ம­ய­மாக்­கப்­ப­டு­வ­தும் அதன் ஒரு கட்­ட­மாக சுமார் 2 லட்­சம் சதுர அடி பரப்­ப­ள­வில் புதிய கட்­ட­டங்­கள் கட்­டப்­ப­டு­வ­தும் வர­வேற்­கத்­தக்­கது," என அன்­பு­மணி தெரி­வித்­துள்­ளார்.

வளர்ந்த நாடு­களில் எந்த மர­மும் வெட்டி வீழ்த்­தப்­ப­டு­வ­தில்லை என்­றும் மாற்று ஏற்­பா­டாக அவை வேரு­டன் பிடுங்­கப்­பட்டு வேறு இடங்­களில் நட்டு வளர்க்­கப்­ப­டு­வ­தா­க­வும் அன்­பு­மணி சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

அதற்­கான நவீ­னத் தொழில்­நுட்­பங்­கள் வந்­து­விட்ட நிலை­யில், இந்­தி­யா­வில் உள்ள ரயில்வே துறை உட்­பட எந்த துறை­யும் நிறு­வனமும் அது­போன்ற தொழில்­நுட்­பங்­களை பயன்­ப­டுத்த மறுப்­பது ஏன்? என அன்­பு­மணி கேள்வி எழுப்பி உள்­ளார்.