சென்னை: மின்வெட்டு காரணமாக அவதிக்கு ஆளான பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் கிழக்கு கடற்கரை பகுதியில் பரபரப்பு நிலவியது.
உத்தண்டி, பனையூர், அக்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பல மணி நேரம் மின்வெட்டு நீடிப்பதாகக் குமுறிய அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் நள்ளிரவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் சாலையில் குவிந்ததை அடுத்து, மின்வெட்டுக்கு தீர்வு காண்பதாக அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

