சென்னை: தமிழகக் தலைநகர் சென்னையின் சவுகார்பேட்டைப் பகுதியில் இருக்கும் ஒரு வணிகக் கட்டடத்தில் திங்கட்கிழமை காலை தீ மூண்டது.
மின்ட் ஸ்திரீட்டில் உள்ள கட்டடத்தில் தீ மூண்டது.
இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
தீ மூண்டபோது கட்டடத்தில் யாரும் இல்லை.
தீப்பிடித்துக்கொண்ட கட்டடத்தில் தங்க நகைக்கடை, சேலைக் கடை உள்ளிட்டவை இருந்தன.
தீயணைப்பாளர்கள் சுமார் ஒரு மணிநேரத்தில் தீயை அணைத்தனர்.