விரைவில் விரிவடைகிறது தமிழகத் தலைநகர் சென்னை

விரைவில் விரிவடைகிறது தமிழகத் தலைநகர் சென்னை

2 mins read

சென்னை: தமி­ழ­கத்­தின் தலை­ந­க­ரான சென்­னையை விரி­வு­படுத்­தும் நட­வ­டிக்­கை­களை அரசு மேற்­கொண்­டுள்­ளது. இதற்­கான திட்­டப்­ப­ணி­கள் முழு­வீச்­சில் நடந்­தே­றும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சென்னை மட்­டு­மல்­லா­மல் திரு­வள்­ளூர், செங்­கல்­பட்டு, காஞ்­சி­புரம் உள்­ளிட்ட அதன் அண்டை மாவட்­டங்­களும் தொழில் மையங்­க­ளாக உருவெடுத்து வரு­கின்­றன.

எனவே தொழில் நக­ர­ம­ய­மாக்­கல் திட்­டத்­தின் கீழ், இம்­மாவட்­டங்­களை ஒருங்­கி­ணைப்­ப­தன் மூலம் விரி­வான வளர்ச்சி காண முடி­யும் என அரசு கரு­து­கிறது.

இதற்­காக கடந்த 1976ஆம் ஆண்­டி­லேயே 'முதல் முழுமைத் திட்­டம்' (1976-96) தயா­ரிக்­கப்­பட்­டது. அடுத்த இரு­பது ஆண்டு­களுக்­குள் இத்­திட்­டத்­தைச் செயல்­ப­டுத்த அப்­போது இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது.

சென்­னை­யில் பெருகி வரும் மக்­கள் தொகைக்கு ஏற்ப, போக்கு­வ­ரத்து, உட்­கட்டமைப்­பில் கவ­னம் செலுத்­த­வும் நகர நெரி­சலை குறைப்­ப­தற்­கும் பல்­வேறு திட்­டங்­கள் வகுக்­கப்­பட்­டன.

'முத­லாம் முழுமைத் திட்­டம்' சிறப்­பா­கச் செயல்­ப­டுத்­தப்­பட்­டதையடுத்து இரண்­டாம் முழுமைத் திட்­டம் (2006-26) தயா­ரா­னது. "அதன் மூலம் சூழ­லி­யல் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த பகு­தி­கள், ஒழுங்­குப்­ப­டுத்­தப்­பட்ட நீர்ப்­பி­டிப்புப் பகு­தி­கள் கண்­ட­றி­யப்­பட்­டன. அவை வரை­ய­றுக்­கப்­பட்ட வளர்ச்சி மண்­ட­லங்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டன.

"மேலும், அங்­கீ­க­ரிக்­கப்­படாத மனைப்­பி­ரி­வு­களை முறைப்­படுத்து­தல் உள்­ளிட்ட பணி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன. இந்­நி­லை­யில், இரண்­டாம் முழுமைத் திட்­டத்­திற்­கான கால வரம்பு 2026ஆம் ஆண்­டு­டன் முடி­வுக்கு வரு­கிறது.

"இதை­ய­டுத்து 'மூன்­றாம் முழுமைத் திட்­டத்­திற்'­கான (2026-46) ஆயத்த பணி­கள் தொடங்கி உள்­ளன," என்று சென்னை பெரு­ந­கர வளர்ச்­சிக் குழும அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

உலக வங்­கி­யின் நிதி உதவி­யோடு தமிழ்­நாடு வீட்­டு­வ­சதி மற்­றும் வாழ்­விட மேம்­பாட்டு திட்­டத்­தின் கீழ் 1189 சதுர கிலோ மீட்­டர் பரப்­பி­லான சென்னை பெரு­ந­கர பகு­திக்கு மூன்­றாம் முழுமைத் திட்­டம் பற்­றிய ஆய்­வு­கள் தொடங்­கப்­பட்டு அதற்­கான பணி­கள் மும்­மு­ர­மாக நடை­பெற்று வரு­வ­தாக அதி­கா­ரி­கள் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

"தலை­ந­கர் விரி­வாக்­கம் என்பது ஒருங்­கி­ணைந்த வளர்ச்சி திட்­டத்­தின் கீழ் வரு­வ­தால் சரி­யான சாலை இணைப்புகள், போக்­கு­வ­ரத்து வச­தி­கள் மூலமாக புதிய தொழில் நக­ரங்­களை உரு­வாக்க முடி­யும். அந்த வகை­யில் வளர்ச்சி மிகுந்த இடங்­களை தேர்வு செய்­கி­றோம்.

"சென்­னை­யில் புதிதாக ஜவுளி நக­ரம், தொழிற்­பேட்­டை­கள் அமக்­கப்­படும். விரி­வாக்­கம் மூல­மாகத் தொழில் வளர்ச்­சிக்­கான அனைத்து வித­மான வாய்ப்பு­களை­யும் உரு­வாக்க முடியும்," என அதி­கா­ரி­கள் மேலும் தெரி­வித்­துள்­ள­னர்.

முழுவீச்சில் செயல்படுத்தப்பட உள்ள 'மூன்றாம் முழுமைத் திட்டம்'