திருப்பூரில் சிதைந்தநிலையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

1 mins read
38dd3955-e3e2-428c-b3de-9cd96a9049de
-

திருப்­பூர்: சோம­வா­ரப்­பட்டி பகு­தி­யில் வீடு கட்­டு­வ­தற்­கான கட்­டு­மா­னப் பணி­க­ளின்­போது முது­மக்கள் தாழி­யும் சில எலும்­பு­களும் கிடைத்­துள்­ளன. இதை­ய­டுத்து அங்கு தொல்­லி­யல் துறை ஆய்வு மேற்­கொள்ள வேண்­டும் என பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

உடைந்த நிலை­யில் உள்ள முது­மக்­கள் தாழி உள்­ளிட்ட சில பொருள்­கள் பெருங்­கற்­கால சின்னங்­க­ளாகக் கரு­தப்­பட வேண்டும் என ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

திருப்­பூர் மாவட்­டம், சோம­வாரப்­பட்­டி­யில் வஞ்­சி­முத்து என்­பவர் தனக்குச் சொந்­த­மான நிலத்­தில் வீடு­கட்டி வரு­கி­றார்.

நேற்று முன்­தி­னம் கட்­டு­மா­னப் பணிக்­காக பெரிய பள்­ளம் தோண்­டப்­பட்­டது. அப்­போது சுமார் நான்கு அடி உய­ர­முள்ள முது­மக்­கள் தாழி­யும் பற்­க­ளு­டன் கூடிய தாடை உள்­ளிட்ட சில எலும்­பு­களும் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. இதை­ய­டுத்து தொல்­லி­யல் ஆர்­வ­லர்­கள் விரைந்து சென்று அவற்­றைப் பார்­வை­யிட்­ட­னர்.

"இவை சுமார் ஆயி­ரம் ஆண்டு ­க­ளுக்கு முற்­பட்­ட­வை­யாக இருக்க வாய்ப்­புள்­ளது.

"கடந்த பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு இதே பகு­தி­யில் இரண்­டாயி­ரம் ஆண்­டு­கள் பழ­மை­யான சேரர் முத்­தி­ரை­கள், பிராமி எழுத்து­க­ளு­டன் கூடிய சில பொருள்­கள் கிடைத்­தன. எனவே விரி­வாக ஆய்வு நடத்­தப்­பட வேண்­டும்," என அவர்­கள் தெரி­வித்­த­னர்.