'ஜெயலலிதா மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன்'

'ஜெயலலிதா மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன்'

1 mins read
3fb1a6cf-831c-4679-83c0-9122c9bbe983
-

சென்னை: தமிழ்­நாட்­டின் பாஜக தலை­வர் அண்­ணா­ம­லைக்­கும் முக்­கிய எதிர்க்­கட்­சி­யான அதிமு­க­வுக்­கும் இடை­யில் பிரச்­சினை வலுத்துவரும் நிலை­யில், முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லிதா மீது தான் மிகப் பெரிய மரி­யாதை வைத்­துள்­ள­தாக நேற்று அண்­ணா­மலை தெரி­வித்­தார்.

"அவ­ரைப் பற்றி நான் ஒரு செய்­தித்­தா­ளுக்கு அளித்த பேட்டி தவ­றா­கப் பொருள் கொள்­ளப்­பட்டு இருக்­கிறது," என்­றும் அண்­ணா­மலை தெரி­வித்­தார்.

அந்­தப் பேட்­டி­யில் ஜெய­லலி­தா­வின் பெயரைத் தான் ஓர் இடத்­தில் கூட குறிப்­பி­ட­வில்லை என்­றார் அவர்.

டைம்ஸ் ஆஃப் இந்­தியா செய்­தித்­தா­ளுக்கு அளித்த பேட்­டி­யில், தமிழ்­நாட்­டின் முன்­னாள் முதல்­வர் ஒரு­வர் ஊழல் குற்­றச்­சாட்­டின் பேரில் தண்­டிக்­கப்­பட்டு இருப்­ப­தாக அண்­ணா­மலை தெரி­வித்து இருந்­தார்.

இத­னை­ய­டுத்து அவ­ருக்கு எதி­ராக அதி­மு­க­வில் பெரி­ய­ள­வில் எதிர்ப்புக் குரல் கிளம்பி தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

இந்த நிலை­யில், அண்­ணா­மலை ஜெய­ல­லிதாவைத் தான் மதிப்பதாக விளக்­கம் அளித்து இருக்­கி­றார்.