மீன்பிடித் தடை முடிந்தது: மீனவர்கள் தயாராகிறார்கள்

மீன்பிடித் தடை முடிந்தது: மீனவர்கள் தயாராகிறார்கள்

1 mins read

கன்­னி­யா­கு­மரி: கன்­னி­யா­கு­மரி முதல் சென்னை திரு­வள்­ளூர் வரை­யி­லான கிழக்குக் கடற்­கரைப் பகு­தி­யில் ஆண்­டு­தோறும் ஏப்­ரல், மே மாதங்­களில் மீன்­கள் இனப்­பெ­ருக்­கம் செய்­யும் என்­ப­தால் அந்த மாதங்­களில் விசைப்­ப­ட­கு­களில் ஆழ்­க­ட­லில் மீன்­பி­டிக்­கக் கூடாது என்று தடை விதிக்­கப்­ப­டு­கிறது.

அத­னை­யொட்டி இந்த ஆண்டு ஏப்­ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை தடை விதிக்­கப்­பட்டு இருந்­தது. தடை நேற்று முடி­வ­டைந்­தது.

இத­னை­ய­டுத்து மீன­வர்­கள் விசைப்­ப­ட­கு­கள் மூலம் ஆழ்­க­ட­லுக்­குச் சென்று மீன்­பி­டிக்க தயா­ரா­கி­விட்­ட­தா­க­வும் அவர்­கள் இன்­று­மு­தல் கட­லுக்­குச் செல்­கி­றார்­கள் என்­றும் நேற்று தக­வல்­கள் தெரி­வித்­தன.