தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரு படகுகள் மூழ்கியதில் 7 மீனவர்கள் தத்தளிப்பு

2 mins read
65fe5775-e6f9-4c5f-99cc-30fe140b1e5a
-

சென்னை: மீன்­பிடி தடை­க்கா­லம் புதன்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணிக்கு முடிந்­த­தால் தமிழ்­நாட்­டி­லும் புதுச்­சேரி­யி­லும் மீன­வர்­கள் உற்­சா­கத்­து­டன் பட­கு­களை இயக்கி கட­லுக்­குச் சென்­ற­னர்.

தமிழ்­நாட்­டி­லும் புதுச்­சே­ரி­யி­லும் மீன்­க­ளின் இனப்­பெ­ருக்­கத்­திற்­காக ஒவ்­வோர் ஆண்­டும் ஏப்­ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் மீன்­பிடிக்­கத் தடை விதிக்­கப்­ப­டு­கிறது.

இவ்­வாண்டு இந்­தத் தடைக் காலத்­தில் மீன­வர்­கள் தங்­க­ளது விசைப் பட­கு­களைப் பழுது \பார்த்­த­தோடு, வலை­கள் உள்­ளிட்ட உப­கரணங்­க­ளை­யும் சீர­மைத்­த­னர்.

மீன்­பிடி தடைக்­கா­லம் முடி­வடைந்த நிலை­யில், நள்­ளி­ரவு முதல் தொழி­லுக்கு புறப்­பட்­டுச் சென்­ற­னர்.

சென்னை காசி­மேட்­டில், மீன­வர்­கள் தங்­க­ளது விசைப் பட­கிற்கு கற்­பூ­ரம் ஏற்றி வழி­பட்டு கட­லுக்­குள் சென்­ற­னர். நாகை மாவட்ட மீன­வர்­கள் உற்­சா­கத்­து­டன் ஆழ்­க­டல் மீன்­பி­டிப்­பிற்­கா­கச் சென்­ற­னர்.

நாகப்­பட்­டி­னம் அருகே அக்­கரைப்­பேட்­டை­யில் மீன்­பிடி துறை­முகத்­தி­லி­ருந்து தடைக்­கா­லம் முடிவு பெற்­ற­தால் ஏரா­ள­மான மீன­வர்­கள் மீன்பிடிக்­கச் சென்­ற­னர்.

கீச்­சாங்­குப்­பம் மீனவ கிரா­மத்­தைச் சேர்ந்த அஞ்­சப்­ப­ன் என்­ப­வ­ருக்­குச் சொந்­த­மான பட­கில் 4 மீன­வர்­கள் கட­லுக்கு மீன்­பிடிக்கச் சென்­றுள்­ள­னர்.

நாகை­யில் இருந்து 5 கடல் மைல் தொலை­வில் மீன்­பி­டித்­துக் கொண்­டி­ருந்­த­போது பட­கில் கடல்­நீர் உட்­பு­குந்து படகு மூழ்­கி­யது.

இத­னால் பட­கில் சென்ற ஆறு­மு­கம், மைக்­கேல் சந்­தோஷ், கண்­ணன் ஆகிய 4 மீன­வர்­களும் நடுக்­க­ட­லில் தத்­த­ளித்­த­னர். இத­னைத் தொடர்ந்து மற்­றொரு பட­கில் மீன்பிடித்­துக் கொண்­டி­ருந்த சகமீன­வர்­கள் அவர்­களை மீட்டு கரைக்கு அழைத்து வந்­துள்­ள­னர்.

தொடர்ந்து அவர்­கள் அனை­வ­ரும் நாகை அரசு மருத்­து­வ­மனை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மற்­றொரு சம்­ப­வத்­தில் நாகை மாவட்­டம் நாக­ரா­ஜன் என்­ப­வருக்­குச் சொந்­த­மான பட­கும் மீன்­பி­டிக்­கச் சென்­ற­போது எதிர்­பா­ராதவித­மாக கட­லில் மூழ்­கி­யது. பட­கில் சென்ற ரெத்­தி­னம், குஞ்­சாலு, சிவக்­கு­மார் ஆகிய 3 பேரும் சகமீன­வர்­க­ளால் பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­ட­னர்.