அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் புதன் இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிசெய்யும் பாஜக அரசை உலக நாடுகளே பாராட்டுகின்றன. 2014 ஆம் ஆண்டு பொருளிய லில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5வது இடத்தில் உள்ளது. இதற்கு பிரதமர் மோடிதான் காரணம்.
"வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.
"2014ல் போக்குவரத்து துறையில் பணி நியமன முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
"அவரைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளார். அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்," என்றார்.

