தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆளுநர்-முதல்வர் நடத்தும் நீயா, நானா பதிலடி அரசியல்

2 mins read
c7d71ac5-5443-436e-b526-25fc4f305870
-

ஆளுநர்: அளித்த விளக்கம் சரியில்லை; முதல்வர்: உங்களுக்கு அதிகாரம் இல்லை

சென்னை: தமி­ழக அமைச்­சரவையில் இடம்­பெற்று இருந்த அமைச்சர் செந்­தில் பாலாஜி கைதா­னதை அடுத்து அவர் இலாகா இல்­லாத அமைச்­ச­ரா­கத் தொடர்­கி­றார்.

அவர் பார்த்து வந்த இலா­காக்­களை வேறு அமைச்­சர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்க முடிவு செய்து அர­ச­மைப்­புச் சட்­டத்­தின்­படி அதற்­கான அங்­கீகா­ரத்­தைப் பெற விரும்பி அதற்­கான பரிந்­துரை கடி­தத்தை ஆளு­நர் ஆர்­என் ரவி­யி­டம் முதல்வர் அனுப்­பி­னார்.

அமைச்­சர் செந்­தில் பாலாஜி மருத்­துவ கார­ணங்­க­ளுக்­காக மருத்­து­வ­ம­னை­யில் இருக்­கி­றார்.

அவர் சிகிச்சை பெற்­று­வ­ருவ தால் அவ­ரின் இலா­காக்­களை வேறு அமைச்­சர்­கள் பார்க்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது.

குண­ம­டை­யும்வரை செந்தில் பாலாஜி இலாகா இல்­லாத அமைச்­ச­ராக இருப்­பார் என்று தமி­ழக அர­சின் கடி­தத்­தில் தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது.

ஆனால் இலாகா மாற்­றங்­க­ளுக்­கான கார­ணங்­கள் சரி­யில்லை; அவை தவ­றான பொருள் தரு­கின்­றன என்று சொல்லி கடி­தத்தை ஆளு­நர் திருப்பி அனுப்­பி­விட்­டார்.

இதற்­குப் பிறகு சில மணி­களி­லேயே கார­சா­ர­மான பதில் கடி­தத்தை ஆளு­ந­ருக்கு முதல்­வர் மு.க. ஸ்டா­லின் அனுப்­பி­னார்.

இலாகா மாற்­றத்­திற்­கான கார­ணங்­க­ளைக் கேட்க ஆளு­ந­ருக்கு அதி­கா­ரம் எது­வும் கிடை­யாது என்று பதில் கடி­தத்­தில் முதல்­வர் தெரி­வித்­தார்.

புலன்­வி­சா­ர­ணையை எதிர்­நோக்­குவ­தா­லேயே அமைச்­சர் ஒரு­வர் தன் பத­வி­யைக் கைவிட வேண்­டும் என்ற அவ­சி­யம் இல்லை என்­பதை முதல்­வர் தன் கடி­தத்­தில் சுட்­டி­னார். அர­ச­மைப்­புச் சட்­டத்­தின்­படி ஆளு­நர் நடக்க வேண்­டும் என்­றும் முதல்­வர் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் தமி­ழக உயர் கல்­வித்­துறை அமைச்­சர் பொன்­முடி, நாடாளுமன்ற உறுப்­பி­னர் இளங்கோ இரு­வ­ரும் வியா­ழக்­கி­ழமை பின்நேரத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­னர்.

அமைச்­சர் செந்­தில்­ பாலாஜியை நீக்க வேண்­டும் என ஆளு­நர் மே மாதம் 31ம் தேதி­ ஒரு கடி­தம் எழு­தி­ய­தாகவும் அடுத்த நாளே முதல்­வர் ஆளு­நருக்­குப் பதில் கடி­தம் எழு­தி­ய­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.

ஆளு­ந­ரின் கடி­தம் அர­சி­யல் சட்­டத்­திற்கு எதி­ரா­னது; அமைச்­சரை நீக்­கவோ, நிய­மிக்­கவோ முத­ல­மைச்­ச­ருக்­குத்­தான் அதி­காரம் இருக்­கிறது.

இது குறித்து பரிந்­து­ரை­களை அளிக்­க ஆளு­ந­ருக்கு அர­சி­யல் சாச­னத்­தின்­படி எவ்­வித அதி­கா­ர­மும் இல்லை என்­பது எல்­லாம் கடி­தத்­தில் சுட்­டிக்­காட்­டப்­பட்ட தாக­வும் அவர்கள் விளக்­கி­னர்.

தமி­ழ­கத்­தைப் பொறுத்­த­வரை முதல்­வர்-ஆளு­நர் இரு­வ­ருக்­கும் இடை­யில் இணக்­க­மான போக்கு இல்லை. இரு­வ­ரும் நீயா-நானா அர­சி­யல் நடத்­து­கி­றார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்டு வந்­துள்­ளது.

இதில் இப்போது செந்தில் பாலாஜி விவகாரமும் சேர்ந்து கொண்டுள்ளது.