திடீர் சூறாவளி: கூடலூரில் 1,000 வாழை மரங்கள் சாய்ந்தன

திடீர் சூறாவளி: கூடலூரில் 1,000 வாழை மரங்கள் சாய்ந்தன

1 mins read

நீல­கிரி: நீல­கிரி மாவட்­டம் கூடலூர் சுற்­று­வட்­டா­ரத்­தில் நேற்று திடீ­ரென அடித்த சூறைக் காற்­றில் 1,000க்கும் மேற்­பட்ட நேந்­திர வாழை மரங்­கள் அடியோடு சாய்ந்­தன.

கேரள மக்­க­ளின் முக்­கிய பண்­டி­கை­யான ஓணம் திரு­விழாவை முன்­னிட்டு கூட­லூர் சுற்­று­வட்­டாரப் பகு­தி­களில் பல ஏக்­கர் பரப்­ப­ள­வில் நேந்­திர வாழையை விவ­சா­யி­கள் பயி­ரிட்­டுள்­ள­னர்.

இன்­னும் இரண்டு மாதங்­களில் அறு­வ­டைக்குத் தயாராகும் நிலை­யில் இருந்தபோது நேற்று திடீ­ரென்று அரை­மணி நேரம் கடும் சூறா­வளி வீசி­யது.

வாழை மரங்­கள் அடி­யோடு சாய்ந்­துவிட்டதால் பல லட்­சம் ரூபாய் இழப்பு ஏற்­பட்­டு­விட்­ட­தாக விவ­சா­யி­கள் கவலை அடைந்­துள்­ள­னர்.

வேளாண் அதி­கா­ரி­கள் உரிய ஆய்வு நடத்தி தகுந்த இழப்­பீடு வழங்­கு­வ­தற்கு ஆவன செய்ய வேண்­டும் என்று தமிழ்­நாடு அர­சுக்கு விவ­சா­யி­கள் உட­ன­டி­யாக கோரிக்கை விடுத்­த­னர்.