நாகர்கோவிலிலிருந்து நாகப்பட்டினம் வரை: 14 வயது சிறுமியை கடத்தி தொல்லை கொடுத்து குடும்பம் நடத்திய ஆடவர் கைது

நாகர்கோவிலிலிருந்து நாகப்பட்டினம் வரை: 14 வயது சிறுமியை கடத்தி தொல்லை கொடுத்து குடும்பம் நடத்திய ஆடவர் கைது

2 mins read

நாகர்­கோ­வில்: நாகர்­கோ­வில் ஈத்­தா­மொழி பகு­தி­யைச் சேர்ந்த பக்­கத்து வீட்டு 14 வயது சிறு­மி­யைக் கடத்­தி ­பா­லி­யல் தொல்லை கொடுத்து சிறு­மி­யுடன் குடும்பம் நடத்­திய மூன்று பிள்­ளை­க­ளின் தந்தை போக்சோ சட்­டத்­தின்­கீழ் கைதா­னார்.

இது­பற்றி காவ­ல்துறை தரப்­பில் செய்தியாளர்களிடம் பல விவ­ரங்­கள் தெரி­விக்­கப்­ப­ட்டன.

நாகர்­கோ­வில் ஈத்­தா­மொழி பகு­தி­யைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த சில நாட்­க­ளுக்கு முன்பு திடீ­ரென்று மாய­மா­னார்.

பல இடங்­க­ளி­லும் தேடி­யும் கிடைக்­கா­த­தால் சிறு­மி­யின் பெற்­றோர் கன்­னி­யா­கு­மரி அனைத்து மக­ளிர் காவல் நிலையத்­தில் புகார் செய்­த­னர். வழக்­குப் பதி­வா­னது.

சிறு­மி­யின் வீட்­டுக்­குப் பக்­கத்து வீட்டில் வசிக்­கும் மூன்று பிள்­ளை­க­ளுக்­குத் தந்­தை­யான ஆட­வ­ரும் தலை­ம­றை­வா­கிப் போய் இருந்­தது அதி­கா­ரி­களின் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

சிறு­மியை அந்த நபர் கடத்தி சென்று இருக்­க­லாம் என்று நம்­பிய அதி­கா­ரி­கள், அந்­த ஆடவரைத் தேடத் தொடங்­கி­னர். அவர் நாகப்­பட்­டி­னத்­தில் இருப்­பது கைப்­பேசித் தொடர்பு மூலம் தெரி­ய­வந்­தது.

உட­ன­டி­யாக கன்­னி­யா­கு­மரி மக­ளிர் காவல்­நி­லைய அதி­கா­ரி­கள் நாகப்­பட்­டி­னம் விரைந்­த­னர். அங்கு தேடி­ய­போது வாடகை வீடு ஒன்­றில் சிறு­மி­யு­டன் அந்த ஆட­வர் குடும்­பம் நடத்­தி­யது தெரி­ய­வந்­தது.

வாலி­பர் கைதா­னார். சிறுமி மீட்­கப்­பட்­டார். இரு­வ­ரும் கன்­னி­யா­கு­ம­ரிக்­குக் கொண்டு வரப்­பட்­ட­னர். அந்த ஆட­வர் சிறு­மி­யைக் கடத்தி சென்று பாலி­யல் தொல்லை கொடுத்து வந்­தது பிறகு நடந்த விசா­ரணை­யில் தெரி­ய­வந்­தது.

அந்த ஆடவரை போக்சோ சட்­டத்­தின்கீழ் கைது செய்த அதி­கா­ரி­கள், அவரை நீதி­மன்­றத்­தில் நிறுத்தி சிறை­யில் அடைத்­த­னர். மீட்­கப்­பட்ட சிறுமி மருத்­துவ பரி­சோ­த­னைக்­காக அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பப்பட்­டார்.