தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக அரசு: நோயாளிகள், குடும்பத்தினர் தங்க வேலூரில் குறைந்த கட்டண விடுதி

2 mins read
a3069d68-9837-44ce-b68f-ccc2df049b51
-

சென்னை: தமிழ்­நாட்­டில் வேலூர் மாவட்­டத்­தில் இயங்­கி­வ­ரும் சிஎம்சி போன்ற பல்­வேறு மருத்­துவமனை­களில் சிகிச்சை பெற தமிழ்­நாடு மட்­டு­மின்றி இந்­தியா முழு­வ­தும் இருந்தும் ஏரா­ள­மான நோயா­ளிகள் வரு­கி­றார்­கள். அவர்­களில் பல­ரும் ஏழை­கள்.

நோயா­ளி­க­ளு­டன் வரும் உற­வி­னர்­களும் நோயா­ளி­களும் குறைந்த கட்­ட­ணத்­தில் தங்கு ­வ­தற்கு வாட­கைக்கு அறை கிடைப்­ப­தில்லை.

இந்­தக் குறை­யைப் போக்­கும் வகை­யில் வேலூர் சத்­து­வாச்­சேரி உள்­வட்­டத்­தில் உள்ள பெரு­முகை என்ற கிரா­மத்­தில் 2 ஹெக்­டேர் நிலம் தேர்வு செய்­யப்­பட்டு, அதில் 250 படுக்கை வச­தி­கள் கொண்ட தங்­கும் விடுதி கட்­டப்­படும்.

தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டா­லின் வியா­ழக்­கி­ழமை இந்த அறி­விப்பை விடுத்­தார்.

அந்த விடு­திக்கு 'கலை­ஞர் நூற்­றாண்டு தங்­கும் விடுதி' என்று பெய­ரி­டப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

சென்­னை­யில் தமி­ழக அரசு சார்­பில் ரூ.376 கோடி செல­வில் கட்­டப்­பட்­டுள்ள உயர் சிறப்பு மருத்­து­வ­ம­னை­யைத் தாதி­யர்­களுடன் சேர்ந்து திறந்­து­வைத்­துப் பேசி­ய­போது முதல்­வர் இந்த அறி­விப்பை விடுத்­தார்.

புதிய உயர் சிறப்பு மருத்­துவ மனை 6.03 லட்­சம் சது­ர­டி­யில், 1,000 படுக்­கை­க­ளு­டன் கட்­டப்­பட்டு உள்­ளன. பல்­வேறு நவீன சிறப்பு வச­தி­களைக் கொண்ட அந்தப் பல்­நோக்கு மருத்­து­வ­மனை 15 மாதங்­களில் கட்டி முடிக்­கப்­பட்டு சாதனை நிகழ்த்­தப்­பட்டு இருப்­ப­தா­க­வும் முதல்­வர் குறிப்­பிட்­டார்.

ஆறு தளங்­க­ளைக் கொண்ட மருத்­து­வ­மனை வளா­கத்­தில் ஏ-புற­நோ­யா­ளி­கள் சிகிச்­சைக் கட்­ட­டம், பி-அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்­சைப் பிரிவு, சி-எக்ஸ்ரே உள்­நோ­யா­ளி­க­ளுக்­கான சிகிச்சைப் பிரிவு என மூன்று தொகு­தி­கள் உள்­ளன.