தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'தமிழகத்தில் மின்னிலக்கப் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு'

2 mins read
252c7230-b1a0-4775-befc-01f7aed2f8d8
-

ஸ்டாலின்: நிதிநுட்ப நகரம் திட்டத்தின் மூலம் 80,000 பேருக்கு வேலை கிடைக்கும்

சென்னை: தமி­ழ­கத்­தில் மின்­னிலக்கப் பணப் பரி­வர்த்­தனை அதி­க­ரித்­துள்­ள­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், தமி­ழ­கத்­தில் திறன் வாய்ந்த, படித்த இளை­யர்­கள் அதி­க­மாக உள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

நிதிநுட்ப சேவை­களை ஒரே இடத்­தில் பெறு­வ­தற்கு ஏது­வாக தமி­ழ­கத்­தில் புதி­தாக நிதி­நுட்ப நக­ரம் அமைக்க அரசு முடிவு செய்­துள்­ளது. இதற்­கான அடிக்­கல் நாட்டு விழா நேற்று முன்­தினம் நடை­பெற்­றது.

இதில் கலந்­து­கொண்டு பேசிய முதல்­வர், இப்­பு­திய திட்­டத்­தின் மூலம் ஏறத்­தாழ 80 ஆயி­ரம் பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும் என்­றும் 12,000 கோடி ரூபாய் மதிப்­புள்ள முத­லீ­டு­களை ஈர்க்­கும் வகை­யில் இப்­பு­திய நிதி­நுட்ப நகரம் அமை­கிறது என்­றும் தெரி­வித்­தார்.

"தமி­ழ­கம் ஏரா­ள­மான உலக நிறு­வ­னங்­களை ஈர்த்து வரு­கிறது. தமிழ்­நாட்­டில் முத­லீடு செய்ய அனைத்­து­லக நிறு­வ­னங்­கள் ஆர்­வம் காட்­டு­கின்­றன.

"சென்­னை­யைத் தொடர்ந்து கோவை, திருச்சி, மது­ரை­யில் நிதி­நுட்ப நக­ரம் அமைக்­கப்­படும். தற்­போது அதி­வே­க­மாக வளர்ந்து வரும் தக­வல் தொழில்­நுட்­பம், புத்­தாக்க நிறு­வ­னங்­கள் தமிழ்­நாட்டி­லும் சிறந்த வளர்ச்­சி­யைப் பெற்­றுள்­ளன," என்­று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கூறி­னார்.

கடந்த இரண்டு ஆண்­டுகளாக அரசு எடுக்­கும் நட­வ­டிக்­கை­களால் தமி­ழ­கம் தலை­நி­மிர்ந்­துள்ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், நிதி­நுட்பத் திட்­டங்­களை மதி நுட்பத்­து­டன் ஈர்க்க அரசு ஏரா­ள­மான முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

நிதி­நுட்ப நக­ரங்­க­ளின் உலகளா­விய மைய­மாக தமி­ழ­கத்தை மாற்­று­வதே அர­சின் இலக்கு என்­றார் முதல்வர்.

இதற்­கி­டையே, நேற்று முன்­தினம் அரசு அதி­கா­ரி­கள் பங்­கேற்ற ஆய்­வுக்­கூட்­டத்­தில் பேசிய முதல்­வர் ஸ்டா­லின், தமி­ழக அர­சின் முத்­தி­ரைத் திட்­டங்­கள் உரிய காலத்­தில் நிறை­வேற்­றப்­பட வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.

குறிப்பாக, பருவமழை போன்ற இடர்ப்பாடுகள் வருவதற்கு முன்பு, இலக்கு நிர்ணயித்த காலத்தில் திட்டங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.