தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜி20: வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு வாழை இலை போட்டு விருந்து

1 mins read
0a6d1344-8673-4d6d-8b7f-5fa14138c68f
-

செங்­கல்­பட்டு: ஜி20 மக­ளிர் மாநாட்­டில் பங்­கேற்ற வெளி­நாட்­டுப் பிர­தி­நி­தி­க­ளுக்கு வாழை இலை விருந்து படைக்­கப்­பட்­டது.

இந்த விருந்­து­ப­ச­ரிப்­பும் உணவு வகை­களும் தங்­களை வெகு­வா­கக் கவர்ந்­தது என அதில் பங்­கேற்ற பெண் பிர­தி­நி­தி­கள் தெரி­வித்­த­னர்.

மாமல்­ல­பு­ரத்­தில் மக­ளிர் ஜி20 உச்ச மாநாடு இரு தினங்­கள் நடை­பெற்­றது. இதில் பிரான்ஸ், இத்­தாலி, இங்­கி­லாந்து தென் கொரியா, அமெ­ரிக்கா உள்­ளிட்ட 18 நாடு­க­ளைச் சேர்ந்த பெண் பிர­தி­நி­தி­கள் 150 பேர் பங்­கேற்­ற­னர்.

நேற்று முன்­தி­னம் மாநாடு நிறை­வ­டைந்­ததை அடுத்து அதில் பங்­கேற்ற பிர­தி­நி­தி­க­ளுக்கு முழுக்க முழுக்க தமிழ் கலா­சா­ரத்­தைப் பின்­பற்றி சிறப்பு விருந்து ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

பந்தி அமைத்து, வாழை இலை போட்டு சாம்­பார், பொரி­யல், அப்­ப­ளம், பாயா­சம் என சுவை­யான உணவு வகை­கள் பரி­மா­றப்­பட்­டன. அவற்­றைப் பரி­மா­றி­ய­வர்­களும் வேட்டி, சட்டை அணிந்­தி­ருந்­த­னர்.

திரு­மண நிகழ்­வு­போல் வெளி­நாட்­டுப் பிர­தி­நி­தி­க­ளின் விருப்­பத்­தைக் கேட்­ட­றிந்து உணவு வகை­கள் பரி­மா­றப்­பட்­டன. இதனால் அவர்­கள் மிக­வும் உற்­சா­கம் அடைந்­த­தா­க­வும் தமி­ழக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.