தலைவர்கள், வாக்களிக்க பணம், திரைப்பட வசனம்: மாணவர்களிடம் மனம் திறந்த விஜய்

1 mins read
e10d98d7-a0e2-44e9-aefc-fa1c5c3e504d
-

சென்னை: மாணவர்கள் தலைவர்களைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்றவர்களிடம் இருந்து நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

தமி­ழ­கத்­தில் 10, 12ஆம் வகுப்பு ­க­ளுக்­கான பொதுத்­தேர்­வில் அதிக மதிப்­பெண்­களைப் பெற்ற மாணவ, மாண­வி­ய­ருக்கு ஊக்கத்­தொகை, சிறப்­புப் பரி­சு­களை வழங்கி பாராட்டு தெரி­வித்­தார் நடி­கர் விஜய். இதற்­காக சென்­னை­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட அவர், இது­போன்ற நிகழ்ச்­சி­யில் தாம் பேசு­வது இதுவே முதன்­முறை என்­றார். தன் மன­தில் பெரும் பொறுப்­பு­ணர்ச்சி வந்­த­து­போல் உணர்­வ­தாகக் குறிப்­பிட்ட அவர், வருங்­கால இந்­தி­யா­வின் நம்­பிக்கை நட்­சத்­தி­ரங்­களைச் சந்­திப்­பது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

"இந்த நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்­வ­தற்கு முக்­கிய கார­ணம் அண்­மை­யில் ஒரு திரைப்­ப­டத்­தில் இடம்­பெற்ற வச­னம். 'காடு இருந்­தால் எடுத்­துக்­கொள்­வார்­கள். பணம் இருந்­தால் பிடுங்­கிக் கொள்­வார்­கள். ஆனால் படிப்பை மட்­டும் உங்­க­ளி­ட­மி­ருந்து எடுத்­துக்­கொள்­ளவே முடி­யாது' என்ற அந்த வச­னம் என்னை மிக­வும் பாதித்­தது. இது நூற்­றுக்கு நூறு உண்மை மட்­டு­மல்ல, இன்­றைய யதார்த்த நிலை­யும் இது­தான்," என்­றார் விஜய்.

தேர்­த­லில் பணம் வாங்­கிக்­கொண்டு வாக்­க­ளிக்­கக் கூடாது என்று அறி­வு­றுத்­திய அவர், இது­கு­றித்து மாண­வர்­க­ளுக்­குப் பள்ளி­களில் கற்­றுக்­கொ­டுக்க வேண்­டும் என்­றார். மாண­வர்­கள் சுய அடை­யா­ளத்தை விட்­டு­வி­டக் கூடாது என்­றும் நம் கையை வைத்து நம் கண்­ணையே குத்து ­வ­து­தான் நடக்­கிறது என்றும் விஜய் தெரிவித்தாரர்.