தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்வில் வெற்றி: மாணவியை சொந்தச் செலவில் விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியை

1 mins read
96881b56-5e1c-4d41-a6d2-bcc129dfc074
-

அரி­ய­லூர்: தேசிய திற­ன­றித் தேர்­வில் வெற்­றி­பெற்ற மாண­வியை தனது சொந்­தச் செல­வில் விமா­னத்­தில் அழைத்­துச் சென்ற பள்ளித் தலைமை ஆசி­ரி­யைக்­குப் பாராட்­டு­கள் குவி­கின்­றன.

அரி­ய­லூர் மாவட்­டம், வான­வ­நல்­லூர் ஊராட்சி ஒன்­றிய நடு­நிலைப்­பள்­ளி­யில் தலைமை ஆசிரி­யை­யா­கப் பணி­யாற்றி வரு­கி­றார் அமுதா.

அண்­மை­யில் தனது பள்­ளி­யில் படிக்­கும் மாண­வி­களை உற்­சா­கப்­ப­டுத்­தும் வகையில் அவர் ஓர் அறி­விப்பை வெளி­யிட்­டார்.

தேசிய திற­ன­றித் தேர்­வில் வெற்றி பெறும் மாண­வி­களை தன் சொந்­தச் செல­வில் விமா­னத்­தில் அழைத்­துச் செல்­வ­தாக அறி­வித்­ததை அடுத்து, அவ­ரது பள்ளி மாண­வி­கள் எட்டு பேர் தேர்­வில் பங்­கேற்­ற­னர்.

அவர்­களில் எட்­டாம் வகுப்பைச் சேர்ந்த மிரு­ணா­ளினி என்ற மாணவி தேர்­வில் வெற்­றி­ பெற்­றுள்­ளார்.

இதை­ய­டுத்து தாம் அளித்த வாக்­கு­று­தி­யின்­படி சிறுமி மிருணாளி­னியை திருச்­சி­யில் இருந்து சென்­னைக்கு விமா­னத்­தில் அழைத்­துச் சென்­றுள்­ளார் தலைமை ஆசி­ரியை அமுதா.

சென்­னை­யில் மாணவி மிரு­ணா­ளி­னிக்கு சில இடங்­க­ளைச் சுற்­றிக்­காண்­பித்துவிட்டு, மீண்டும் ரயி­லில் அரி­ய­லூ­ருக்கு அழைத்து வந்­தார் அமுதா.

கொடுத்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­றிய தலைமை ஆசிரி­யைக்கு சமூக ஊட­கங்­கள் மூலம் ஏரா­ள­மா­னோர் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர்.