தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோவை, இலங்கை இடையே மீண்டும் விமானச் சேவை

1 mins read
50205fd8-9b8e-44de-9bda-c99e1181d389
கொரோனா நெருக்­கடி காலத்­தில் நிறுத்­தப்­பட்ட கோவை, இலங்கை இடை­யே­யான விமா­னச் சேவை விரை­வில் தொடங்க உள்­ளது. படம்: புளும்பெர்க் -

கோவை: கொரோனா நெருக்­கடி காலத்­தில் நிறுத்­தப்­பட்ட கோவை, இலங்கை இடை­யே­யான விமா­னச் சேவை விரை­வில் தொடங்க உள்­ளது.

இது தொடர்­பான பேச்­சு­வார்த்தை நடை­பெற்று வரு­­வதாக கோவை விமான நிலைய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

"கோவை, இலங்கை இடையே கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்­கன் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னம் விமா­னங்­களை இயக்கி வந்­தது.

பய­ணி­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்த போதி­லும், 2020ஆம் ஆண்டு தற்­கா­லி­க­மாக அந்த விமா­னச் சேவை நிறுத்­தப்­பட்­டது.

"மிக விரை­வில் மீண்­டும் இச்­சே­வை­யைத் தொடங்­கு­வதற்கு ஏது­வாக 'ஸ்லாட்' என்று குறிப்­பி­டப்­படும் விமா­னம் வந்து செல்­லும் நேரம், ஓடு­பாதை, விமான நிறுத்­து­மி­டம் ஆகி­ய­வற்றை நிர்­ண­யிக்­கும் நட­வ­டிக்கை­கள் தொடங்­கும். விரை­வில் அதி­கா­ர­பூர்வ அறி­விப்­பும் வெளி­யா­கும்," என அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.