அமைச்சர், எம்.பி. கடும் வாக்குவாதம்: மேடையில் தள்ளிவிடப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்

அமைச்சர், எம்.பி. கடும் வாக்குவாதம்: மேடையில் தள்ளிவிடப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்

2 mins read
a40711d2-3bc8-49ab-ba90-cf353c2d5ae8
-

ராம­நா­தபுரம்: விளை­யாட்­டுப் போட்­டிக்­கான பரி­ச­ளிக்­கும் விழா­வின்­போது அமைச்­ச­ருக்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­கும் இடையே ஏற்­பட்ட வாக்­கு­வா­தம் ராம­நா­த­பு­ரத்­தில் பர­ப­ரப்பை ஏற்­படுத்­தி­யது. அச்­ச­ம­யம் இரு தரப்பை­யும் சமா­தா­னப்­ப­டுத்த முயன்ற மாவட்ட ஆட்­சி­யர் மேடை ­யி­லி­ருந்து தள்­ளி­வி­டப்­பட்­டார்.

ராம­நா­த­பு­ரத்­தில் அண்­மை­யில் முதல்­வர் கிண்ண விளை­யாட்­டுப் போட்­டி­கள் நடை­பெற்­றன. அவற்­றில் வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்கு பரி­ச­ளிக்­கும் விழா நேற்று முன்­தி­னம் ஆட்­சி­யர் அலு­வ­லக வளா­கத்­தில் நடை­பெற்­றது.

இதில் ஆட்­சி­யர் விஷ்ணு சந்­தி­ரன், பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலத்­துறை அமைச்­சர் ராஜ­கண்­ணப்­பன் ஆகி­யோர் பங்­கேற்­ற­னர். இரு­வ­ரும் வந்­த­வு­டன் நிகழ்ச்சி தொடங்­கி­விட்­டது.

இதனால் சற்று தாமதமாக வந்து சேர்ந்த ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி கடும் அதிருப்தி அடைந்தார். அவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

தாம் வருவதற்குள் விழாவை அவசரமாகத் தொடங்க வேண்டிய அவசியம் என்ன என்று அவர் ஆட்சியரிடம் கேள்வி எழுப்ப, அமைச்சர் அதற்கு விளக்கம் அளித்தார்.

இதை­ய­டுத்து அமைச்­ச­ருக்­கும் எம்­பிக்­கும் இடையே விழா மேடை­யி­லேயே வாக்­கு­வா­தம் மூண்­டது. இத­னால் இரு­வ­ரின் ஆத­ர­வா­ளர்­களும் மேடை­யில் ஏறி­விட்­ட­னர்.

மோதல் பெரி­தா­வதைத் தடுக்க, இரு தரப்­பி­ன­ரை­யும் சமா­தா­னப்­ப­டுத்த முயன்­றார் ஆட்­சி­யர் விஷ்ணு சந்­தி­ரன். அப்­போது தள்ளு­முள்ளு ஏற்­பட்­ட­தில் அவரை மேடை­யில் இருந்த ஒருவர் தள்­ளி­விட்­டார்.

ஆட்­சி­யர் கீழே விழுந்­த­தால் பர­ப­ரப்பு கூடி­யது. எனி­னும் அவர் சுதா­ரித்­துக்­கொண்டு இரு­த­ரப்­பை­யும் சமா­தா­னப்­ப­டுத்­தி­னார்.

பின்­னர் இச்­சம்­ப­வம் தொடர்­பாக அவர் அரசு தலை­மைச் செய­ல­ரி­டம் புகார் அளித்­த­தா­கத் தெரி­கிறது. இம்மோதல் தொடர்­பான படங்­களும் காணொ­ளி­களும் சமூக பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.