ரூ.500 கோடி வசூலித்து மோசடி: தம்பதியர் கைது

1 mins read

சென்னை: பொது மக்­க­ளி­டம் இருந்து ஐநூறு கோடி ரூபாய்க்­கும் மேல் வசூ­லித்து மோசடி செய்த தம்­ப­தி­யர் சென்னை காவல்­து­றை­யால் கைது செய்­யப்­பட்­ட­னர்.

சென்­னையைத் தலை­மை­ இ­ட­மாகக் கொண்டு செயல்­பட்ட 'ஹிஜாவு' என்ற நிதி நிறு­வ­னம் அதிக வட்டி தரு­வ­தா­கக் கூறி தமி­ழ­கம் முழு­வ­தும் பொது மக்களி­டம் இருந்து கோடிக்­கணக்­கில் பணம் வசூ­லித்­தது.

மொத்­தம் ரூ.4,400 கோடி அள­வுக்கு பணம் வசூ­லித்த அந்­நி­று­வ­னம் திடீ­ரென மூடப்­பட்­டது. காவல்­துறை மேற்­கொண்ட விசா­ர­ணை­யின் முடிவில் 14 பேர் கைதா­கி­னர்.

அவர்­க­ளி­டம் இருந்து ரூ.14.47 கோடி ரொக்­கப்­ப­ணம், தங்க நகை­கள், வெள்­ளிப் பொருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

மேலும் ரூ.75 கோடி மதிப்­புள்ள அசையா சொத்­து­கள், ரூ.90 கோடி மதிப்­புள்ள 54 அசை­யும் சொத்­து­கள் ஆகி­ய­வற்­றை­யும் கண்­ட­றிந்து அதி­காரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

நிதி நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் உள்­ளிட்ட 15 பேர் தொடர்ந்து தலை­ம­றை­வாக உள்­ள­னர். இந்­நி­லை­யில் இந்­நி­று­வ­னத்­தின் இயக்­கு­நர்­களில் ஒரு­வ­ரான சுஜாதா காந்­தா­வும் அவ­ரது கண­வர் கோவிந்­த­ரா­ஜூ­லு­வும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இரு­வ­ரும் ரூ.500 கோடி பணம் வசூ­லித்து மோசடி செய்ததாக வழக்­குப் பதி­வாகி உள்­ளது.

அவர்­க­ளி­டம் இருந்து முக்­கிய ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­க­வும் விரி­வான விசா­ரணை நடத்­தப்­படும் என்­றும் சென்னை காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.