'நீட்' தேர்வில் சாதித்த நரிக்குறவர் இன மாணவி

1 mins read
e297e48d-2dde-4694-9dbb-d266f25aaa72
-

பெரம்­ப­லூர்: நரிக்­கு­ற­வர் இனத்­தைச் சேர்ந்த மாணவி கோகிலா (படம்) மருத்­து­வப் படிப்­புக்­கான நீட் நுழை­வுத் தேர்­வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்­துள்­ளார்.

கடின உழைப்­பால் நீட் தேர்வில் 161 மதிப்­பெண்­க­ளை­ப் பெற முடிந்தது என்­றும் வாய்ப்பு கிடைத்­தால் தனது சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு மருத்­துவச் சேவை­யாற்­றப் போவ­தா­க­வும் அவர் கூறி­னார்.

பெரம்­ப­லூர் மாவட்­டம், காரை கிரா­மத்­தில் வசிக்­கிறது கோகிலா­வின் குடும்­பம். தந்தை சுப்­பி­ர­மணி­யன் பாசி மணி­கள் விற்று அதில் கிடைக்­கும் வரு­மா­னத்தை வைத்து குடும்­பத்­தைக் காப்­பாற்றி வரு­கி­றார்.

"என்­னைப் படிப்­பில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர­வேண்டும் என்ற ஆசை­யு­டன் படிக்க வைக்­கி­றார் அப்பா. எனவே படிப்­பில் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கிறேன். 12ஆம் வகுப்பு பொதுத்­தேர்­வில் 459 மதிப்­பெண்­கள் பெற்று தேர்ச்சி அடைந்­தேன்," என்­கி­றார் கோகிலா. நீட் தேர்­வில் பழங்­கு­டி­யின மாண­வி­கள் தேர்ச்சிக்கு 109 மதிப்­பெண்­கள் போது­மா­னது என்ற நிலை­யில் மாணவி கோகிலா 161 மதிப்­பெண்­கள் எடுத்­துள்­ளார்.