உடல் மெலிந்து காணப்படும் அரிக்கொம்பன் யானை

தேனி: அரிக்கொம்பன் யானை உடல் மெலிந்த நிலையில் இருந்தாலும் உடல் உறுப்புகள் நல்ல நிலையில் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வப்போது காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறும் அரிக்கொம்பன் யானை இடையில் தொடர்ந்து அரிசி சாப்பிட்டு வந்ததால் அதன் உடல் உப்பிசமாக காணப்பட்டது என்றும் தற்போது காட்டு உணவு, புல் சாப்பிடுவதால் அதற்கு வன விலங்குக்கான உடல்வாகு வந்துள்ளது என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

அரிக்கொம்பன் யானை உடல் மெலிந்து காணப்படும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அடுத்த 15 நாள்களில் அந்த யானை பழைய நிலையை அடைந்துவிடும் என்றும் அதன் நடமாட்டம் மருத்துவக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் மேலும் கூறினர்.

அரிக்கொம்பன் யானை அவ்வப்போது தேனி வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இந்நிலையில் வனத்துறையினர் அதைப் பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டு வந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!