எளிய மனிதர் அப்துல் கலாம் நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி

ராமேசுவரம்: முன்னாள் அதிபர் அப்துல் கலாமின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாட்டு மக்கள் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினர்.

ராமேசுவரத்தில் உள்ள தேசிய நினைவிடத்தில் அப்துல் கலாம் சிலைக்கு அவரது குடும்பத்தினர், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானார் நேரில் மரியாதை செலுத்தியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் உள் கட்டமைப்புகளைத் தவிர மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்று கலாமின் அண்ணன் பேரன் ஷேக் தாவூத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதிதாக கட்டப்படும் பாம்பன் ரயில் பாலத்துக்கு அப்துல் கலாம் பெயரைச் சூட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“அறிவுசார் மையம், மின்னிலக்க நூலகம், ஆராய்ச்சியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட தொழில்நுட்ப கண்காட்சியகம், அறிவியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்,” என்று ஷேக் தாவூத் வேண்டுகோள் விடுத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!