தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆடிப்பெருக்கு: கனகாம்பரம் கிலோ ரூ.600

1 mins read
fc979e41-d0f5-471e-8631-66b3532d2e80
தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்குப் பண்டிகைக் கொண்டாடப்படும் சூழலில் பூ விலை கூடிவிட்டது. கனகாம்பரம் கிலோ ரூ.600க்கு விற்கப்படுகிறது. - படம்: தமிழக ஊடகம் 

சென்னை: தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு பூ சந்தைக்கு வரத்து குறைந்ததால் பூ விலை ஏறியது.

கனகாம்பரம் கிலோ ரூ.600 க்கு விற்கப்பட்டது. சாமந்திப்பூவின் வரத்தும் குறைந்ததால் அதன் விலையும் அதிகரித்து ரூ.180 வரை விற்பனை ஆகிறது. விற்பனை மந்தமாக நடக்கிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

முல்லைப் பூ கிலோ ரூ.300க்கு விலை போனது. மல்லிப்பூ ரூ.400க்கு விற்கப்பட்டது. பன்னீர் ரோஸ் ரூ.50 முதல் ரூ.60 வரையும் அரளிப்பூ ரூ.200க்கும் சம்பங்கி கிலோ ரூ.120க்கும் சென்டுமல்லி பூ விலை ரூ.60க்கும் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்